7. பெயர்
சுரேஷ் வாசலை நோக்கி 5வது முறையாக பார்த்தான்.
'என்னடா சும்மா சும்மா வாட்சையும் வாசலையும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டே இருக்கே? உன்னோட co-tenant வர நேரமா?' சுரேஷின் மண்டையில் அடித்தான் பிரகாஷ். 'ஆமான்டா' மண்டையை தேய்த்தபடியே பதிலளித்தான் சுரேஷ்.
'அதுக்கு ஏன்டா இவ்வளோ டென்ஷன் ஆகற. சரி, எனக்கு பசிக்குது, போய் maggie கொண்டு வா' அதட்டினான் பிரகாஷ்.
'நீயே போய் செஞ்சுக்கோ' கூறிவிட்டு சோபாவில் சாய்ந்து கொண்டான் சுரேஷ். 'டேய் நான் உன் guest டா. நீ போய் செஞ்சு கொண்டு வா. பசி தாங்கல. சமையலறைக்குள் சுரேஷ்ஐ தள்ளி விட்டு சோபாவில் தொப்பென்று விழுந்து T.V.ஐ அன் செய்தான்.
வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். அவள் உள்ளே நுழைந்து கதவை தாளிட்டாள். பிரகாஷை பார்த்ததும் அப்படியே நின்றால். உட்கார்ந்திருந்த அவன் மெதுவே எழுந்தான்.
சில விநாடி தயகத்திற்கு பின், 'ஹலோ, ஐ அம பிரகாஷ். சுரேஷோட friend ' . 'ஹலோ. நான் மாடில குடி இருக்கேன். இங்கே co-tenant.' என்று தன்னை அறிமுகப்படுதிக் கொண்டாள்.
'நான் அவன் கதையோட publishing details பத்தி பேச வந்தேன்.' அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் விழித்தான். 'oh ! sorry for the disturbance . you continue . நான் மாடில தான் இருப்பேன். disturb பண்ண மாடேன்.' என்றாள். 'நோ,நோ disturbance ஒன்னும் இல்லே. எங்க discussion ஓவர். ஜஸ்ட் அவன சமைக்க சொல்லி வேல வாங்கிடுருந்தேன். நீங்களும் வாங்களேன் சாப்படலாம்.' அவளை அழைத்தான் பிரகாஷ்.
'இல்லே இருக்கட்டும். பரவா இல்லே. Thank you. நான் ரூமுக்கு போறேன் ' கூறிவிட்டு படி ஏறினாள். 'அன்னிகோடா தோசைக்கு compensationnu நெனச்சிகொங்க' சொல்லிக்கொண்டே சுரேஷ் வந்தான்.
'ஹாய். உம.. ஓகே.. டென் minutes ல வரேன். நீங்க வெயிட் பண்ண வேண்டாம்' சொல்லி விட்டு தனது ரூமிற்கு ஓடி கதவை சாதினாள்.
அவள் தலை மறைந்ததும், பிரகாஷ் சுரேஷை முற்றுகை இட்டான். 'டேய், கோ-டெனன்ட் நு சொன்னியே, பொண்ணு நு சொன்னியாட?' காரமாய் கேட்டான். 'உனக்கு எதுக்கு சொல்லணும். Just a co-டெனன்ட், அவ்வளோ தானே.' தட்டை எடுத்துக்கொண்டே பதிலளித்தான் சுரேஷ்.
'ஒரு பொண்ணுடா. சரி விடு. பேரு என்ன சொல்லு' கேட்டான் பிரகாஷ். 'தெரியாது' பதில் வந்தது. அவனை முறைத்துவிட்டு 'கடவுள், தேவ இல்லாதவங்களுக்கு தான் எல்லாமே தருவான்' என்று புலம்பிவிட்டு, 'நீ ஒன்னும் சப்டவேண்டாம். கொண்ட இங்கே.' என அவன் தட்டையும் பிரகாஷே பிடுங்கி கொண்டு maggie - ஐ விழுங்க ஆரம்பித்தான்.
மாடியிலிருந்து அவள் வந்தாள். சுரேஷிற்கு நன்றி கூறிவிட்டு தனது தட்டை எடுத்துக்கொண்டாள். 'நீங்க சாப்படல?' சுரேஷை கேட்டாள். 'நான் சாப்டா அவன் சாப்டா மாதிரி தான். இல்லேடா' பிரகாஷ் பதிலளித்தான். அவள் புன்னகைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
'நான் எனக்கு செஞ்சிகப்போறேன். யாருக்காவது இன்னும் வேனுமா?' கேட்டான் சுரேஷ். இருவரும் வேண்டாம் என்று தலை ஆட்டினர். அவன் மீண்டும் சமையலறைக்குள் சென்றான். பிரகாஷ் அவளை நோக்கி 'இங்கே உக்காந்துக்கொங்க' என்று அவன் எழுந்து கொண்டு சோபாவை காட்டினான். அவள் அமர்ந்ததும் அருகில் இருந்த சாரில் அமர்ந்தான்.
'என் பேர் பிரகாஷ். அவனோட எடிட்டர் avum இருக்கேன்.' என்றான் மீண்டும். அவள் சிரித்து விடு 'என் பேரு ..' என்று சொல்லும் போது பிரகாஷ் பலமாகத் தும்பினான். காதலி தீடிவைத்து அவள் பெயரை கேட்க காத்துக் கொண்டிருந்த சுறேஷிருக்கு ஒன்றும் கேட்கவில்லை. பிரகாஷை நன்றாக கறித்தான்.
'I am sorry. Excuse me' பிரகாஷ் கைகுட்டையால் வாயை மூடினான். ' Thats ok' என்றாள். 'முகஸ்துதிக்கு சொல்லலே, ஆனா உங்களுக்கு ஏத்த பேரு.' என்றான் பிரகாஷ். 'Oh! I am flattered.' என்று அவள் பதிலுக்கு புன்னகைத்தாள். அவர்கள் இருவரும் புன்னகைப்பதை பார்த்துக்கொண்டே சுரேஷ் வெளியே வந்தான்.
'தேங்க்ஸ் maggieku ' என்றாள் அவனைப்பார்த்து. 'இல்லே, அண்ணியோட தோசைக்கு compensation தான்' என்றான். ' அன்னிகப்பரம் உங்கள பாக்கள. மூணு நாள் ஆச்சுனு நெனைக்கறேன்' என்றாள்.
'ஆமா என்னோட அடுத்த கதைக்கு பிளாட் யோசிசிட்டு இருக்கேன். பஸ்-ஸ்டாண்ட்ல தான் உக்காந்து யோசிப்பேன். அங்கே ஏதாவது inspiration கெடைக்கும். உங்கள கூட ஒரு நாள் பாத்தேன்.' என்றான்.
'ஒ அப்படியா. பிளாட் ஏதும் கெடச்சுதா?' கேட்டாள். 'க்ரைம் நோவேல் எழுதலாம்னு இருக்கேன். எனக்கு அது கொஞ்சம் கஷ்டம். so எனக்கு நானே challenge எடுத்துருக்கேன் இந்ததடவ.' என்றான். 'உன்னக்கு மட்டுமா கஷ்டம். நீ எழுதறத படிக்கற என்னக்கும் தான் கஷ்டம்' என்றான் பிரகாஷ். அவள் மிகவும் சிறியதாக புன்னகைத்தாள்.
'சரி, நான் கெளம்பறேன். உன்னோட புக், பைனல் எடிட்டிங் வேல முடிஞ்சி அடுத்த மாசம் புப்ளிஷ் ஆகிடும். நீ எழுத போற க்ரைம விட இது நல்லாவே இருக்கும்' என்று அவனிடம் கூறிவிட்டு, 'நைஸ் மீட்டிங் யு' என இவளிடம் சிரித்துவிட்டு, தனது கார்டை கொடுத்துவிட்டு, கிளம்பினான் பிரகாஷ்.
அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான் சுரேஷ். 'என்னங்க உங்க பிரண்டு நீங்க எழுத ஆரம்பிகரதுகு முன்னவே இப்படி சொல்லறாங்க?' அவனிடம் கேட்டாள். 'ஒம்போது வருஷமா கூட குப்ப கொட்டரானே.' பதிலளித்தான். 'நீங்க எழுதின புக்ஸ் படிச்சிருக்கேன்' என்றாள். 'ஒ தேங்க்ஸ். பிடிச்சிருந்துதா?' கேட்டான். 'ம்ம் ஆனா உங்க ஸ்டோரீஸ் ல எப்பவும் லேடீஸ் stronga இருப்பாங்க.யார் influence ?' சிரித்தாள்.
'வேற யாரு, எங்க அம்மா தான். பக்கதிலேந்து பாத்திருக்கேன்ல. என்ன கேட்ட எல்லா லேடிசும் ஸ்ட்ராங் தான் மென்டலி. அவங்க அப்படி இருக்கறதால தான் குடும்பம் குடும்பமா இருக்கும். என்ன பொருத்தவரைக்கும், அப்பாக்கள் பசங்களுக்கு செல்லம் கொடுக்க அம்மா நல்லபடியா வளக்க. கரெக்டா?' கேட்டான்.
அவள் அப்படியே அவனை பார்த்தாள். இருவரும் இல்லாத இளைய வயதில் இவன் எப்படி கஷ்டப்படிருப்பன் என்று நினைத்தாள். ஆனால் கூற முடியவில்லை. 'என்ன மதர் காம்ப்ளெக்ஸ் நு நைகரிங்கள நினைகரிங்களா? நீங்க என்ன நெனச்சாலும் சரி. என்னோட heroines எல்லோரும் என்னோட அம்மாவோட பிரதி பிம்பங்கள் தான்.' என்றான்.
'அது இல்லே. உங்களுக்கு உங்க அம்மா மேல எவ்வளோ affection நு நெனச்சேன்.' என்றாள். அவன் வெறுமையான சிரிப்பை அவளிடம் உதிர்த்தான்.
'சரி, நான் தூங்க போறேன். அவன்குட கொஞ்ச நேரம் பேசினா கூட மோல மூளை காஞ்சி போய்டும். தலைய சாப்டுடுவான். Good night. நீங்க தூங்கல?' கேட்டான்.
சடாரென்று, தனது மொபைலை எடுத்து பிரகாஷின் எண்ணை அழுத்தினான், அவன் எடுத்தும், 'டேய், பேரென்னடா?' கேட்டான். மறுமுனையில் பலமான சிரிப்பு அடங்கிய பின்னர், 'நீ போன் பண்ணுவேன்னு தெரியுன்டா. பேர் சொல்ல முடியாது. அவங்களே சொல்லலேனா, நா ஏன் சொல்லணும்? உன்னக்கு நல்ல வேணும்டா. ஆனா ஒரு க்ளு தரேன். அவங்களுக்கு ஏத்த பேரு தான்' என்று சொல்லி திரும்ப சிரித்துவிட்டு வைத்தான் பிரகாஷ்.
சுரேஷ் யோசித்துக்கொண்டே படுத்தான். 'அழகினு இருக்காது. அவளோ அழகு நு சொல்லமுடியாது. அப்போ என்ன பேரா இருக்கும்?' என யோசித்துக்கொண்டே எப்போது தூங்கினோம் என்று தெரியாமலே தூங்கி போனான் சுரேஷ்
No comments:
Post a Comment