Thursday, July 8, 2010

Oru kathasiriyarin kathai - 9

9. மொட்டை மாடி


அடுத்த வாரம் இருவருக்கும் வேகமாக ஓடிகொண்டிருந்தது. இருவருரும் பார்த்துக் கொள்ளாமல் வெள்ளிக்கிழமை வந்தது. அன்றிரவு 8.30 வீடு வந்து சேர்ந்தாள். அவனது ரூம் வெளியே தாளிடிருன்தது. தனது மாடிக்கு சென்று குளித்து கிழிறங்கி சமயலாரிக்கு வந்தாள். மேடையில் casserole உம ஒரு பேப்பரும் இருந்தது. 'உங்க பங்கு மாகி' என்றிருந்தது. காஸ்செரோளை திறந்து பார்த்தாள். காய் சேர்த்த மாகி கொஞ்சம் சூடாக இருந்தது. எடுத்து வைத்துக்கொண்டு சாபிட்டாள். T.V. பார்க்க ஆரம்பித்தாள். திடிரெண்டு மொட்டை மாடி கதவு படாரென்று சாத்திக்கொண்டது. மேலே சென்றாள். கதவை திறந்து கீழிருந்த கல்லை இடுக்கில் வைத்தாள். விளக்கு எரியவில்லை. நன்றாக காற்றடித்துக் கொண்டிருந்தது.

'இங்கிருக்கிங்களா'? என்று கேட்டாள்.

''ம்ம். ஆமாம், good evening ' என்று பதில் வந்தது. அவள் சுற்றிப் பார்த்தாள். அவனை காண வில்லை. ' tank மேல இருக்கேன்' என்று குரல் கொடுத்தான். நிமிர்ந்து பார்த்தாள். 'ஹாய்' என்பது போல கை அசைத்தாள்.

'மாக்கிகு தேங்க்ஸ்' என்றாள். 'நோ ப்ராப்லம், அவன் வந்தான், asusual பசியோட. ஆனா இனிக்கு காய் போட்ட மாகி வேணும் நு அடம்பிடிச்சான், என்ன கடைக்கு தொரத்தி சமைக்க வெச்சான்.' என்றான்.

'ஹஹா நல்ல friend ' என்று சிரித்தாள். 'ம்ம் ஆமாம், என் கதையோட first ரெண்டு chapters முடிஞ்சது, அதோட rough draft பாக்க வர சாக்குல உங்கள பாக்க வந்தான். பாவம் ஏமாந்துடான். இப்போல்லாம் ரொம்ப லேட்டா வரிங்களே' கேட்டான்

'ஐயோ பாவம்' சிரித்தாள் . usuala இது தான் என் டைம். போன வாரம் பஸ் timings தெரியாததுனால permission கேட்டுஓடி வந்திருந்தேன். ஆனா இனிமே இந்த டைம் தான்' பெருமுச்சு விட்டாள்.

'ரொம்ப கஷ்டமல. லேட்டா வந்துட்டு வேல பாக்கறது. கல்யானதக்கப்பறம் இன்னும் கஷ்டம் தான்' என்றான். 'ஆமாம், அப்படியும் வேல செய்யறவங்க இருக்கங்கள். ஆனா நான் வேலைக்கு போக மாட்டேன், கல்யனதுக்கப்பறம்' என்றாள்

'ஏன்?' என கேட்டக நினைத்தான் அனால் கேட்கவில்லை. அவளே தொடர்ந்தாள் 'என் அம்மா, நான் கொஞ்சம் வளந்த பெறகு தான் வேலைக்கு போன்னாங்க, சோ நானும் அது போல தான் இருப்பேன். ஆனா அவங்க சும்மா இல்லே, தன்ன தானே update பண்ணிகிட்டாங்க. எனக்கு எங்கம்மா தான் ஆஸ்தான தைலோர், இன்னி வரைக்கும். இபோ அவங்களே ஒரு boutique வச்சிருக்காங்க. நமக்கு தெறம இருந்தா எப்போ வேண்ணா வேல பாக்கலாம். நானும் அப்படி இருக்க போறேன்' என்று முடித்தாள்.

நீங்க எப்படி உங்கள அப்டேட் பண்ணிக்க போறீங்க?' கேட்டான்.

எனக்கு archealogy ல இண்டேறேச்ட். சோ கல்யானதுக்கப்பரம் அவர நச்சரிச்சு படிக்கலாம் நு இருக்கேன்' என்றாள்

சில நிமிடங்கள் பதிலேதும் வரவில்லை. ' ஹலோ துங்கிடின்களா?' கேட்டாள். 'இல்லே உங்கள் archealogist அ imagine பண்ணி பாத்தேன்' என்றான் சிரிப்புடன். 'அப்பறம், எப்படி இருந்தேன்?' கேட்டாள்

'துப்பாக்கியும் மீசையும் இல்லாத வேட்டைகார வேம்பு போல இருந்திங்க' சிரித்தான் மீண்டும். அவளும் புன்னகைத்தாள், ' archealogist னா கடப்பாறைய எடுத்துகிட்டு குழில இறங்கறவங்க மட்டும் இல்லே. coins அண்ட் மொழி ஆராய்ச்சிக்கூட செய்யலாம் என்றாள். 'கரெக்ட் தான்' என்றான் சிரிப்பை புன்னகையை மாற்றிக்கொண்டு. 'future அ இவளோ நல்ல பிளான் பன்னிருகிங்க' என்றான். 'ம்ம் ஆமாம் pastla முழுகவும் கூடாது, futurela மிதக்கவும் கூடாது. பாஸ்ட் அ கணக்குல எடுத்துகிட்டு future அ பிளான் பண்ணனும் இன்னிக்குனு எங்கப்பா சொன்ன அட்வைஸ் என்னக்கு. ' முடித்தாள்.

'சூப்பரா சொன்னாரு உங்க அப்பா. ஆனா சண்ட போடு கிட்டு வந்துடிங்க?' கொஞ்சம் கிண்டலாய் கேட்டான். சிறிது மௌனத்திற்கு பிறகு 'Pridenu வந்துடா, அத தானே மொதல satisfy பண்ணனும்' என்றாள். 'ofcourse , self respect இல்லேன எல்லாம் போச்சு' என்று ஆமோதித்தான். 'நீங்களும் அதுக்கு தானே உங்கள அப்டேட் பண்ணிகிடிங்க' கேட்டாள். இவளது முறை அவனை சீண்ட.

அவன் அதிர்ந்தான். 'ராதா மாமி இல்லே, ரேடியோ மாமி' என்றான். ' அப்டேட் பண்ணிகிட்டது நல்ல விஷயம் தான் ஆனா யாரும் வேண்டாங்கறது என்னது?' என்றாள் மீண்டும் கிண்டலாய். 'நான் யாரையும் பாத்து ஓடல, யாரையும் வேண்டாம்னும் சொல்லல, ஆனா ஒரு circle குள்ளே இருந்துடதுனால, இப்போ freea socialise பண்ண முடியல, அவளோதான்' என்றான்.

'யாரையும் பாத்துஓடலே னு சொல்லறிங்க, ஆனா பொண்ணு பாக்க ஒதுக்கிட்டு கடசில மனச மாத்திகிடிங்கல்ல' அவன் அவளை சற்று முறைத்துப்பர்தான். 'மாமி சொன்னாங்க' நிறுத்தினாள். 'என் சம்பந்த பட்ட விஷயம் இல்லே தான், ஆனா அந்த பொண்ணோட ப்ரைடு, கனவு, வெட்கம் எல்லாத்தையும் மிதிசிடிங்க, ஒரு சக பொண்ணா நீங்க பண்ணது பெரிய தப்பா தோணுது' என்றாள்.

'நான் appologise பண்ணேன்' என்றான் மெதுவாக ஆனால் கோவமாக. 'yea, apology' என்றாள் sarcasticaaga. 'பாஸ்ட மாத்தி, ப்யுசர்ல நடக்காம இருக்க நாம்ம ப்ரெசென்ட் ல ட்ரை பண்ணனும்கறதும் எங்கப்பா சொன்னதுதான். ஒ.கே. நாளைக்கு எனக்கு ஆபீஸ் இருக்கு, நான் கெளம்பறேன். குட் நைட் என்று கூறி கிழே சென்றாள்.

அவன் சொல்லவது அறியாமலும் கோவத்தொடும் அமைதியாய் இருந்தான். அவள் தனது ரூம் கதவை சாத்தியது கேட்டது. அவன் அவனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான்.

Oru kathasiriyarin kathai - 8

8. ஞாயிறு

அவளுக்கு ஞாயிற்றுக் கிழமை பொழுது விடிந்தது - ஒன்பது மணிக்கு. பல் தேய்த்து முகம் அலம்பியும் தூக்கம் கலையவில்லை, கொட்டாவி விட்டுக்கொண்டே கிழிறங்கி வந்தாள். தோட்டத்துப் படியில் அவன் உட்கார்ந்திருப்பதை கண்டு நின்றாள்.


'Good Morning, சீக்கரம் எழுந்துடிங்க Sunday?' என்றாள்.


'Morning, எனக்கு எது sunday monday எல்லாம், deadline , offtime தான்' பதிலளித்தான்.

காபி போட்டாள். இருவரும் குடித்தனர். 'தேங்க்ஸ் காபிக்கு. டெய்லி டிச்டுர்ப் பண்ணறேன்' என்றான்.

'அதெல்லாம் என்னும் இல்லே, எப்படியும் ஒரு ஸ்பூன்ல decoction எறங்காது and again , நீங்க தான் nignt பால் வாங்கி வரிங்க?' என்றாள்.

காபி குடித்து முடித்ததும் அவள் கேட்டாள், 'washing mashine இருக்குனு மாமி சொன்னங்க, எங்கேனு தெரியல' கேட்டாள்

'என் ரூம்ல' பதில் வந்தது. 'இனிக்கு எனக்கு வேணும்' கேட்டாள். அவன் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லவில்லை.

'என்ன, "இதுக்கு தான்னு" யோசிக்கரிங்கள?' கேட்டாள். 'இல்லே, அதான் எல்லாத்துக்கும் solution இருக்கும்னு சொன்னிங்களே, அத தான் யோசிக்கறேன், எங்கே பிக்ஸ் பண்ணறதுன்னு' என்றான்

அவள் பதிலேதும் சொல்லாமல் சின்ன புன்னகையுடன் நின்றிருந்தாள். இரண்டு நிமிடத்திற்கு பிறகு எழுந்தான், மாசினை இழுத்து வந்தான்,
'கொஞ்சம் unconfortable -a தான் இருக்கும்' என்று கூறிவிட்டு, kitchanilirutha plug -il சொருகி, மேலும் இழுத்து தோட்டத்து wash basinil connect செய்தான். அவன் கூறியது போல் wire -ai தூக்கிவிட்டு குனித்து தான் போக வேண்டி இருந்தது. 'thankyou' சொன்னாள்.

'நோ problem ' கூறிவிட்டு, தன் ரூமிற்கு சென்றுவிட்டான். அவள் மாடிக்கு சென்று தன் துணியை எடுத்துக்கொண்டு வந்தாள். நேற்றே வங்கி வந்திருந்த surf -aiyum போட்டாள். machineai on செய்தால். அது ஓடிக்கொண்டிருக்க, வீடு பெருக்கினாள். முதல் ரவுண்டு முடியும் பொது அவளும் முடித்திருந்தாள்.


அவன் வெளியே சென்றதை தோட்டத்திலிருந்து பார்த்தாள். இரண்டாவது roundai போட்டுவிட்டு, தான் வாங்கி வைத்திருந்த மாகியை எடுத்து அடுப்பில் போட்டாள். அது ஆனதும், தட்டில் போட்டுக்கொண்டு, T V முன் ஐக்கியமானாள். சாப்பிட்டு முடித்து எழுந்திருக்க மனமில்லாமல், அப்படியே T V பார்த்க்கொண்டிருந்தாள். மணி 12 ஆகும் போது அவன் வந்தான். கையில் பேப்பர் bundle. கதவை சாதிக்கொண்டான். அவள் அவன் கதவை சில வினாடிகள் பார்த்துவிட்டு தன் கவனத்தை, T V இல் செலுத்தினாள். அதற்குள், machine அழைக்கவே, சென்று அதை நிறுத்திவிட்டு துணிகளை உலர்த்தினால் , machineai , தள்ளி wash basin பக்கத்தில் வைத்தாள். திரும்பவும் வயறு பசிக்கவே, என்ன சமையல் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள். மாடியில் அவள் மொபைல் அலறவே ஓடி சென்று அதை எடுத்தாள்.

'சொல்லுமா' என்றாள்
'என்ன பண்ணறே?' அம்மா கேட்டாள்
'அத தான்யோசிசிகிடு இருக்கேன்' சிரித்தால்
'துணி தொசிடிய?'
'ம்ம் இபோ தான் ஆச்சு. லஞ்ச் தான் என்ன பண்ணறதுன்னு தெரியல'
'இங்கே வரியா? உனக்கு என்ன வேணும்னு சொல்லு;' கணிவாகக்கேட்டல்
'வரலாம் தான் ஆனா அங்கே வந்தேன்னா, திரும்ப இங்கே வர மனசு வராதே. காலைல எழுந்தா உன் கையால காபி, குளிச்சிட்டு வந்த டிபன் ரெடி சாயங்காலம் விட்டுக்கு வந்தாலும் அதே routine , நிம்மதியா இருந்தேன், ஆனா இங்கே எல்லாம் நானே பண்ண வேண்டிருக்கு அதன் அங்கே வந்த இங்கே வர பிடிக்காது. அப்பாவும் எதாவது வாய கிளருவாறு' சிணுங்கினாள்
'நீ செய்யறது அப்படி. ஆனா இபோவவது உனக்கு புரியும்ல உங்கள கேளப்ப நான் எவ்வளோ பாடு படறேன் நு. நல்லது தான் நீ தனிய பொன்னது ஆனா அடுத்தவாரம் சண்டே இங்கே வந்துடு'
'அம்மா பேசாம இப்போ அப்படியே துங்கிட்டு evening போய் எதாவது சாட் item சாப்டலாம் நு இருக்கேன். சூப்பர் ஐடியா ல' என்றாள் கொஞ்சம் மகிழ்ச்சியாக.
'என்னடி இப்படி. next time உன்னை பாக்கும் போது noodles மாதிரி தான் இருப்பே போலிருக்கே' என்றாள் அம்மா கொஞ்சம் கவலையாக
விடுமா இனிக்கு ஒரு நாள் தான் இப்படி. வீக் டயஸ் ல ஒழுங்க தான் சாப்டறேன் சோ டோன்ட் வோர்ருய்' என்றாள்
'என்னவோ பண்ணு. ஆனா முடியாத பக்ஷத்துல இங்கே வந்துடு' என்றாள் அம்மா
'கண்டிப்பா மா இப்போ, தூங்க போறேன். டாட்டா' என்று கூறி விடை பெற்றாள்.

அங்கே அப்பா, -

'என்ன உன் பொண்ணு இனிக்கு வரலாமா?' கேட்டார்

'இல்லையாம்' மெதுவாகக்க் கூறினாள் அம்மா

'அப்போ இனிக்கும் ரசமும் மோரும் தானா?' வெறுப்பாக கேட்டார்

'அவ அங்கே அது கூட இல்லாம இருக்கா, நாம எப்படி விதவிதமா சாப்டறது?'

'அது அவ தப்பு, அப்பளம் கூட இல்லாம என்ன சண்டே. நீ அவளுக்காக பத்தியம் இரு. நான் என் இருக்கணும்?' என்று குதித்தார்.

'எனக்கு கம்பெனி' என்று அமைதியாக கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் அம்மா

இங்கே இவள், பானி பூரியும் சன்னா மசாலாவும் நினைத்தபடியே தூங்க ஆரம்பித்தாள்