Monday, June 21, 2010

Oru kathasiriyarin kathai - 6

6. மன்னிப்பு

சுரேஷ் கண் விழித்து படுகையில் எழுந்து உட்கார்ந்தான்.  மேலே மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தான். மணி பத்தை தாண்டி இருந்தது.  எழுந்து பல் தேய்த்து குளித்து வெளியே வந்தான். ரூம் கதவில் எதோ ஓட்டப்படிருந்ததை பார்த்தான்.

'Good Morning. இன்னிக்கு எவனிங் 7 O'clock பூட்டு மாத வர சொல்லறேன்.  அதுக்கு முன்னாடி நான் வந்திடறேன். சுப்போசே நான் வரதுக்குள்ள அந்த ஆள் வந்துடங்கன்ன, கொஞ்சம் பாத்க்கொங்க ப்ளீஸ். தேங்க்ஸ் இன் அட்வான்ஸ் '  - மாடி போர்சன்
என்று எழுதியிருந்தது.  கதவிலிருந்து அதை கிழித்து கசக்கி போடன்.  சமையலறைக்குள் நுழைந்தான். காபி இருந்தது.  கலந்து கொண்டான்.  மீதி பாலை fridgeil வைத்தான்.  T.V. ஆன் செய்து விட்டு சோபாவில் உட்கார்ந்து சன்னலை மாற்ற ஆரம்பித்தான்.

சற்று நேரம் கழித்து கதவை பூடிகொண்டு வெளியே சென்றான்.  சிறிது நேரம் கழித்து அப்படியே நடந்து பொய் கொண்டிருந்தான்.  பின்னர் ஒரு பஸ்-ஸ்டாப் பெஞ்சில் உட்கார்ந்து தனது அடுத்த கதையின் கருவை உருவாக்க யோசிக்க ஆரம்பித்தான்.  தான் தற்பொழுது எழுதிய 'அபிமானி' ஒரு காதல் கதை என்பதால், க்ரைம் நாவலை எழுத நினைத்தான்.  நேரம் ஓடிக்கொண்டு போனது.  திடிரென்று வயறு சங்கொலி எழுப்பவே, தான் எப்பொழுதும் செல்லும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வீடு திரும்பினான்.  ஆகஸ்டு வெயில் மண்டையை பிளக்கவே,படுத்தான்.

மணி நான்கு அடிக்கும் போது எழுந்தான்.  தனது அறையை சுற்றிப்பர்தான். சுதாம் செய்யும் நேரம் வந்து விட்டது என அது அறிவித்தது.  தனது computeril இருந்து ஆரம்பித்தான்.  பின்னர் புக்-செல்ப் ஐ சரி செய்தான்.  படுக்கையை உதறிப் போடான்.  ஜன்னலின் ஸ்க்ரீன் மிகவும்அழுக்காய் இருந்ததால், கழற்றினான்.  நாளை துவைபதற்காக எடுத்து வைத்திருந்த தனது துணிகளுடன் அதனை சேர்த்தான்.  குப்பையை பெருக்கி அள்ளி தோட்டத்தில் கொண்டு போட்டான்.  அங்கேயே முகம் கை-கால் கழுவிக்கொண்டான். காற்று அருமையாக விசியதால், சிறிது நேரம் அங்கே இருந்த துணி துவைக்கும் கல் மேல் அமர்ந்தான். 

தோட்டத்தை சுற்றிப்பர்தான்.  அத்தனை சுத்தமாக இல்லை இருந்தாலும் ஓரளவுக்கு குப்பை அகற்றப்படிருந்தது.  துளசி மாடத்தில் சிறிய துளசி கன்று புது வரவாகத் தெரிந்தது. அப்படியேஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

வாசல் கதவு திறக்கும் சத்தம் கேடு எட்டிப் பார்த்தான்.  அவள் உள்ளே நுழைந்தாள்.  அப்பொழுதுதான், பொழுது சாய்ந்ததை கவனித்தான்.  ஆனாலும் இன்னும் சூரியன் அஸ்தமனம் ஆகவில்லை.  மணி என்ன என்று ஹாலில் சென்று பார்த்தான்.  ஆறறை ஆகியிருந்தது. 

மாடியிலிருந்து அவள் 'தப தப'என்று ஓடி வந்தாள். திரும்பி பார்த்தான்.  பிரெஷ் ஆகி வேறு சுடிதாரில் இருந்தாள்.  இவனை பார்த்ததும், நின்று, 'நான் பொய் அவங்களை கூடிடுவரேன்' என்றாள். 

'ம்ம்' என்று இவனது பத்தி வருவதற்குள் கதவிடம் சென்றிருந்தாள்.  பாத்து நிமிடம் கழித்து வந்தாள் - கூட ஒரு ஆள்.  அவன், கதவிலிருந்து பூட்டை கழட்ற ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம், புது பூட்டு மாற்றப்பட்டது.  அவன் பைசாவை வாங்கி கொண்டு கிளம்பினான்.  இதில் எதிலும் சுரேஷ் பங்கேற்கவில்லை.

'இந்தாங்க உங்க சாவி' என்று T.V.  பார்த்துக் கொண்டிருந்த சுரேஷிடம்  கொடுத்தாள்.  அதை வாங்கிக் கொண்டு அவளை பார்த்தான்.  அவள் முகத்தில் கோவம் குடி கொண்டிருந்தது. 

'நீங்க இல்லேனா பதுக சொன்னிங்க.  நீங்க இருந்ததால, நான் disturb பண்ணல .  நீங்க கேட்டிருந்த வந்திருப்பேன்' என்றான்.  அவள் சிறு நொடி தாமதித்து, ' கூப்டிருக்கலம் தான் சார், நீங்களா வருவிங்கன்னு நெனச்சேன்' என்றாள்.

'சார் ஆ?' என்றான்.

'சுரேஷ் நு கூப்படலாம்    ஆனா அப்போ நீங்க என் பேர கூப்படனும் அதுக்கு நான் என் பேர சொல்லணும். நீங்க எனக்கு தேவையல்லாத விஷயம் நு சொல்லுவிங்க. எதுக்கு தேவையல்லாத மன கசப்பு' என்றாள்.

மிக செலாக புன்னகைதான்.  பின் அவளிடம், 'சாரி, அன்னிக்கு மாமி சுட்டேன் ஆ, வந்து நீங்க இங்கே தங்கணும் நு சொன்னதால தான் அப்படி பேசிட்டேன். சாரி என்றான்'

என்ன டைம் ஆனாலும் சரி அம்மாவுக்கு கால் பண்ணனும் என்று நினைத்துக்கொண்டாள். 

'actuala, மாமி உங்களுக்கு ஒரு வாரமா ட்ரை பண்ணிட்டு தான் இருந்தாங்க.  ஆனா உங்க மொபைல் 'not reachable ' நு வந்திடுருன்தது' பதிலளித்தாள்.

அப்போது தான், தட்னது மொபைல் பற்றி அவனுது ஞாபகம் வந்தது.  தனது ரூமிற்குள் சென்று, தனது desk திராவேர்-ஐ திறந்து பார்த்தான். அவனது மொபைல் உரிரற்று இருந்தது.charger -ல் போட்டு விட்டு வெளியே வந்தான்.

எனக்கு கால் பண்ணறவங்க அவ்வலோவ கெடையாது. சோ மொபைல் இருக்குங்கறதே அப்பப்ப மறந்துடுவேன்.  அதுவும் deadline கிட்ட வரும் போது.   மாமி கிட்ட  நாளைக்கு apologise பண்ணனும்.' அவளிடம் கூறினான்.

'சரி, நான் தோசை வாக்க போறேன்'  என்று சமையலறைக்குள் நுழைந்தவள், சட்டென்று திரும்பி மாடிக்கு சென்று pursue உடன் வெளியே கிளம்பினாள்.

'என்னாச்சு?' சுரேஷ் வினவினான்.

'ஒண்ணும் இல்லே, உப்பு வாங்க மறந்துட்டேன், அதான்' என்றாள்.

'ம,  நான் வாங்கி வரேன். ஆனா நான் ரெண்டு தோசை வாத்துக்கட்டா?' கேட்டான்.

'ரெண்டு தானா நானே வாத்து தரேன். இந்தாங்க பைசா' என்றாள்.

அவளை பார்த்துவிட்டு, 'நானும் சம்பதிகறவன் தான்' என்று கூறிவிட்டு தனது purse - ஐ எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.

கடையில் உப்புடன், கண்ணெதிரில் தொங்கிக்கொண்டிருந்த இட்லி மிளகாய் பொடி உடன் வீடு திரும்பினான்.

No comments:

Post a Comment