Thursday, July 8, 2010

Oru kathasiriyarin kathai - 9

9. மொட்டை மாடி


அடுத்த வாரம் இருவருக்கும் வேகமாக ஓடிகொண்டிருந்தது. இருவருரும் பார்த்துக் கொள்ளாமல் வெள்ளிக்கிழமை வந்தது. அன்றிரவு 8.30 வீடு வந்து சேர்ந்தாள். அவனது ரூம் வெளியே தாளிடிருன்தது. தனது மாடிக்கு சென்று குளித்து கிழிறங்கி சமயலாரிக்கு வந்தாள். மேடையில் casserole உம ஒரு பேப்பரும் இருந்தது. 'உங்க பங்கு மாகி' என்றிருந்தது. காஸ்செரோளை திறந்து பார்த்தாள். காய் சேர்த்த மாகி கொஞ்சம் சூடாக இருந்தது. எடுத்து வைத்துக்கொண்டு சாபிட்டாள். T.V. பார்க்க ஆரம்பித்தாள். திடிரெண்டு மொட்டை மாடி கதவு படாரென்று சாத்திக்கொண்டது. மேலே சென்றாள். கதவை திறந்து கீழிருந்த கல்லை இடுக்கில் வைத்தாள். விளக்கு எரியவில்லை. நன்றாக காற்றடித்துக் கொண்டிருந்தது.

'இங்கிருக்கிங்களா'? என்று கேட்டாள்.

''ம்ம். ஆமாம், good evening ' என்று பதில் வந்தது. அவள் சுற்றிப் பார்த்தாள். அவனை காண வில்லை. ' tank மேல இருக்கேன்' என்று குரல் கொடுத்தான். நிமிர்ந்து பார்த்தாள். 'ஹாய்' என்பது போல கை அசைத்தாள்.

'மாக்கிகு தேங்க்ஸ்' என்றாள். 'நோ ப்ராப்லம், அவன் வந்தான், asusual பசியோட. ஆனா இனிக்கு காய் போட்ட மாகி வேணும் நு அடம்பிடிச்சான், என்ன கடைக்கு தொரத்தி சமைக்க வெச்சான்.' என்றான்.

'ஹஹா நல்ல friend ' என்று சிரித்தாள். 'ம்ம் ஆமாம், என் கதையோட first ரெண்டு chapters முடிஞ்சது, அதோட rough draft பாக்க வர சாக்குல உங்கள பாக்க வந்தான். பாவம் ஏமாந்துடான். இப்போல்லாம் ரொம்ப லேட்டா வரிங்களே' கேட்டான்

'ஐயோ பாவம்' சிரித்தாள் . usuala இது தான் என் டைம். போன வாரம் பஸ் timings தெரியாததுனால permission கேட்டுஓடி வந்திருந்தேன். ஆனா இனிமே இந்த டைம் தான்' பெருமுச்சு விட்டாள்.

'ரொம்ப கஷ்டமல. லேட்டா வந்துட்டு வேல பாக்கறது. கல்யானதக்கப்பறம் இன்னும் கஷ்டம் தான்' என்றான். 'ஆமாம், அப்படியும் வேல செய்யறவங்க இருக்கங்கள். ஆனா நான் வேலைக்கு போக மாட்டேன், கல்யனதுக்கப்பறம்' என்றாள்

'ஏன்?' என கேட்டக நினைத்தான் அனால் கேட்கவில்லை. அவளே தொடர்ந்தாள் 'என் அம்மா, நான் கொஞ்சம் வளந்த பெறகு தான் வேலைக்கு போன்னாங்க, சோ நானும் அது போல தான் இருப்பேன். ஆனா அவங்க சும்மா இல்லே, தன்ன தானே update பண்ணிகிட்டாங்க. எனக்கு எங்கம்மா தான் ஆஸ்தான தைலோர், இன்னி வரைக்கும். இபோ அவங்களே ஒரு boutique வச்சிருக்காங்க. நமக்கு தெறம இருந்தா எப்போ வேண்ணா வேல பாக்கலாம். நானும் அப்படி இருக்க போறேன்' என்று முடித்தாள்.

நீங்க எப்படி உங்கள அப்டேட் பண்ணிக்க போறீங்க?' கேட்டான்.

எனக்கு archealogy ல இண்டேறேச்ட். சோ கல்யானதுக்கப்பரம் அவர நச்சரிச்சு படிக்கலாம் நு இருக்கேன்' என்றாள்

சில நிமிடங்கள் பதிலேதும் வரவில்லை. ' ஹலோ துங்கிடின்களா?' கேட்டாள். 'இல்லே உங்கள் archealogist அ imagine பண்ணி பாத்தேன்' என்றான் சிரிப்புடன். 'அப்பறம், எப்படி இருந்தேன்?' கேட்டாள்

'துப்பாக்கியும் மீசையும் இல்லாத வேட்டைகார வேம்பு போல இருந்திங்க' சிரித்தான் மீண்டும். அவளும் புன்னகைத்தாள், ' archealogist னா கடப்பாறைய எடுத்துகிட்டு குழில இறங்கறவங்க மட்டும் இல்லே. coins அண்ட் மொழி ஆராய்ச்சிக்கூட செய்யலாம் என்றாள். 'கரெக்ட் தான்' என்றான் சிரிப்பை புன்னகையை மாற்றிக்கொண்டு. 'future அ இவளோ நல்ல பிளான் பன்னிருகிங்க' என்றான். 'ம்ம் ஆமாம் pastla முழுகவும் கூடாது, futurela மிதக்கவும் கூடாது. பாஸ்ட் அ கணக்குல எடுத்துகிட்டு future அ பிளான் பண்ணனும் இன்னிக்குனு எங்கப்பா சொன்ன அட்வைஸ் என்னக்கு. ' முடித்தாள்.

'சூப்பரா சொன்னாரு உங்க அப்பா. ஆனா சண்ட போடு கிட்டு வந்துடிங்க?' கொஞ்சம் கிண்டலாய் கேட்டான். சிறிது மௌனத்திற்கு பிறகு 'Pridenu வந்துடா, அத தானே மொதல satisfy பண்ணனும்' என்றாள். 'ofcourse , self respect இல்லேன எல்லாம் போச்சு' என்று ஆமோதித்தான். 'நீங்களும் அதுக்கு தானே உங்கள அப்டேட் பண்ணிகிடிங்க' கேட்டாள். இவளது முறை அவனை சீண்ட.

அவன் அதிர்ந்தான். 'ராதா மாமி இல்லே, ரேடியோ மாமி' என்றான். ' அப்டேட் பண்ணிகிட்டது நல்ல விஷயம் தான் ஆனா யாரும் வேண்டாங்கறது என்னது?' என்றாள் மீண்டும் கிண்டலாய். 'நான் யாரையும் பாத்து ஓடல, யாரையும் வேண்டாம்னும் சொல்லல, ஆனா ஒரு circle குள்ளே இருந்துடதுனால, இப்போ freea socialise பண்ண முடியல, அவளோதான்' என்றான்.

'யாரையும் பாத்துஓடலே னு சொல்லறிங்க, ஆனா பொண்ணு பாக்க ஒதுக்கிட்டு கடசில மனச மாத்திகிடிங்கல்ல' அவன் அவளை சற்று முறைத்துப்பர்தான். 'மாமி சொன்னாங்க' நிறுத்தினாள். 'என் சம்பந்த பட்ட விஷயம் இல்லே தான், ஆனா அந்த பொண்ணோட ப்ரைடு, கனவு, வெட்கம் எல்லாத்தையும் மிதிசிடிங்க, ஒரு சக பொண்ணா நீங்க பண்ணது பெரிய தப்பா தோணுது' என்றாள்.

'நான் appologise பண்ணேன்' என்றான் மெதுவாக ஆனால் கோவமாக. 'yea, apology' என்றாள் sarcasticaaga. 'பாஸ்ட மாத்தி, ப்யுசர்ல நடக்காம இருக்க நாம்ம ப்ரெசென்ட் ல ட்ரை பண்ணனும்கறதும் எங்கப்பா சொன்னதுதான். ஒ.கே. நாளைக்கு எனக்கு ஆபீஸ் இருக்கு, நான் கெளம்பறேன். குட் நைட் என்று கூறி கிழே சென்றாள்.

அவன் சொல்லவது அறியாமலும் கோவத்தொடும் அமைதியாய் இருந்தான். அவள் தனது ரூம் கதவை சாத்தியது கேட்டது. அவன் அவனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான்.

Oru kathasiriyarin kathai - 8

8. ஞாயிறு

அவளுக்கு ஞாயிற்றுக் கிழமை பொழுது விடிந்தது - ஒன்பது மணிக்கு. பல் தேய்த்து முகம் அலம்பியும் தூக்கம் கலையவில்லை, கொட்டாவி விட்டுக்கொண்டே கிழிறங்கி வந்தாள். தோட்டத்துப் படியில் அவன் உட்கார்ந்திருப்பதை கண்டு நின்றாள்.


'Good Morning, சீக்கரம் எழுந்துடிங்க Sunday?' என்றாள்.


'Morning, எனக்கு எது sunday monday எல்லாம், deadline , offtime தான்' பதிலளித்தான்.

காபி போட்டாள். இருவரும் குடித்தனர். 'தேங்க்ஸ் காபிக்கு. டெய்லி டிச்டுர்ப் பண்ணறேன்' என்றான்.

'அதெல்லாம் என்னும் இல்லே, எப்படியும் ஒரு ஸ்பூன்ல decoction எறங்காது and again , நீங்க தான் nignt பால் வாங்கி வரிங்க?' என்றாள்.

காபி குடித்து முடித்ததும் அவள் கேட்டாள், 'washing mashine இருக்குனு மாமி சொன்னங்க, எங்கேனு தெரியல' கேட்டாள்

'என் ரூம்ல' பதில் வந்தது. 'இனிக்கு எனக்கு வேணும்' கேட்டாள். அவன் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லவில்லை.

'என்ன, "இதுக்கு தான்னு" யோசிக்கரிங்கள?' கேட்டாள். 'இல்லே, அதான் எல்லாத்துக்கும் solution இருக்கும்னு சொன்னிங்களே, அத தான் யோசிக்கறேன், எங்கே பிக்ஸ் பண்ணறதுன்னு' என்றான்

அவள் பதிலேதும் சொல்லாமல் சின்ன புன்னகையுடன் நின்றிருந்தாள். இரண்டு நிமிடத்திற்கு பிறகு எழுந்தான், மாசினை இழுத்து வந்தான்,
'கொஞ்சம் unconfortable -a தான் இருக்கும்' என்று கூறிவிட்டு, kitchanilirutha plug -il சொருகி, மேலும் இழுத்து தோட்டத்து wash basinil connect செய்தான். அவன் கூறியது போல் wire -ai தூக்கிவிட்டு குனித்து தான் போக வேண்டி இருந்தது. 'thankyou' சொன்னாள்.

'நோ problem ' கூறிவிட்டு, தன் ரூமிற்கு சென்றுவிட்டான். அவள் மாடிக்கு சென்று தன் துணியை எடுத்துக்கொண்டு வந்தாள். நேற்றே வங்கி வந்திருந்த surf -aiyum போட்டாள். machineai on செய்தால். அது ஓடிக்கொண்டிருக்க, வீடு பெருக்கினாள். முதல் ரவுண்டு முடியும் பொது அவளும் முடித்திருந்தாள்.


அவன் வெளியே சென்றதை தோட்டத்திலிருந்து பார்த்தாள். இரண்டாவது roundai போட்டுவிட்டு, தான் வாங்கி வைத்திருந்த மாகியை எடுத்து அடுப்பில் போட்டாள். அது ஆனதும், தட்டில் போட்டுக்கொண்டு, T V முன் ஐக்கியமானாள். சாப்பிட்டு முடித்து எழுந்திருக்க மனமில்லாமல், அப்படியே T V பார்த்க்கொண்டிருந்தாள். மணி 12 ஆகும் போது அவன் வந்தான். கையில் பேப்பர் bundle. கதவை சாதிக்கொண்டான். அவள் அவன் கதவை சில வினாடிகள் பார்த்துவிட்டு தன் கவனத்தை, T V இல் செலுத்தினாள். அதற்குள், machine அழைக்கவே, சென்று அதை நிறுத்திவிட்டு துணிகளை உலர்த்தினால் , machineai , தள்ளி wash basin பக்கத்தில் வைத்தாள். திரும்பவும் வயறு பசிக்கவே, என்ன சமையல் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள். மாடியில் அவள் மொபைல் அலறவே ஓடி சென்று அதை எடுத்தாள்.

'சொல்லுமா' என்றாள்
'என்ன பண்ணறே?' அம்மா கேட்டாள்
'அத தான்யோசிசிகிடு இருக்கேன்' சிரித்தால்
'துணி தொசிடிய?'
'ம்ம் இபோ தான் ஆச்சு. லஞ்ச் தான் என்ன பண்ணறதுன்னு தெரியல'
'இங்கே வரியா? உனக்கு என்ன வேணும்னு சொல்லு;' கணிவாகக்கேட்டல்
'வரலாம் தான் ஆனா அங்கே வந்தேன்னா, திரும்ப இங்கே வர மனசு வராதே. காலைல எழுந்தா உன் கையால காபி, குளிச்சிட்டு வந்த டிபன் ரெடி சாயங்காலம் விட்டுக்கு வந்தாலும் அதே routine , நிம்மதியா இருந்தேன், ஆனா இங்கே எல்லாம் நானே பண்ண வேண்டிருக்கு அதன் அங்கே வந்த இங்கே வர பிடிக்காது. அப்பாவும் எதாவது வாய கிளருவாறு' சிணுங்கினாள்
'நீ செய்யறது அப்படி. ஆனா இபோவவது உனக்கு புரியும்ல உங்கள கேளப்ப நான் எவ்வளோ பாடு படறேன் நு. நல்லது தான் நீ தனிய பொன்னது ஆனா அடுத்தவாரம் சண்டே இங்கே வந்துடு'
'அம்மா பேசாம இப்போ அப்படியே துங்கிட்டு evening போய் எதாவது சாட் item சாப்டலாம் நு இருக்கேன். சூப்பர் ஐடியா ல' என்றாள் கொஞ்சம் மகிழ்ச்சியாக.
'என்னடி இப்படி. next time உன்னை பாக்கும் போது noodles மாதிரி தான் இருப்பே போலிருக்கே' என்றாள் அம்மா கொஞ்சம் கவலையாக
விடுமா இனிக்கு ஒரு நாள் தான் இப்படி. வீக் டயஸ் ல ஒழுங்க தான் சாப்டறேன் சோ டோன்ட் வோர்ருய்' என்றாள்
'என்னவோ பண்ணு. ஆனா முடியாத பக்ஷத்துல இங்கே வந்துடு' என்றாள் அம்மா
'கண்டிப்பா மா இப்போ, தூங்க போறேன். டாட்டா' என்று கூறி விடை பெற்றாள்.

அங்கே அப்பா, -

'என்ன உன் பொண்ணு இனிக்கு வரலாமா?' கேட்டார்

'இல்லையாம்' மெதுவாகக்க் கூறினாள் அம்மா

'அப்போ இனிக்கும் ரசமும் மோரும் தானா?' வெறுப்பாக கேட்டார்

'அவ அங்கே அது கூட இல்லாம இருக்கா, நாம எப்படி விதவிதமா சாப்டறது?'

'அது அவ தப்பு, அப்பளம் கூட இல்லாம என்ன சண்டே. நீ அவளுக்காக பத்தியம் இரு. நான் என் இருக்கணும்?' என்று குதித்தார்.

'எனக்கு கம்பெனி' என்று அமைதியாக கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் அம்மா

இங்கே இவள், பானி பூரியும் சன்னா மசாலாவும் நினைத்தபடியே தூங்க ஆரம்பித்தாள்

Thursday, June 24, 2010

OKK - 7

7. பெயர் 

சுரேஷ் வாசலை நோக்கி 5வது முறையாக பார்த்தான்.

'என்னடா சும்மா சும்மா வாட்சையும்  வாசலையும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டே இருக்கே? உன்னோட co-tenant வர நேரமா?' சுரேஷின் மண்டையில் அடித்தான் பிரகாஷ்.  'ஆமான்டா' மண்டையை தேய்த்தபடியே பதிலளித்தான் சுரேஷ். 

'அதுக்கு ஏன்டா இவ்வளோ டென்ஷன் ஆகற.  சரி, எனக்கு பசிக்குது, போய் maggie கொண்டு வா' அதட்டினான் பிரகாஷ்.

'நீயே போய் செஞ்சுக்கோ' கூறிவிட்டு சோபாவில் சாய்ந்து கொண்டான் சுரேஷ்.  'டேய் நான் உன் guest டா.  நீ போய் செஞ்சு கொண்டு வா.  பசி தாங்கல.  சமையலறைக்குள் சுரேஷ்ஐ தள்ளி விட்டு சோபாவில் தொப்பென்று விழுந்து T.V.ஐ அன் செய்தான்.
வாசல்  கதவு  திறக்கும்  சத்தம்  கேட்டு  திரும்பிப் பார்த்தான். அவள் உள்ளே நுழைந்து கதவை தாளிட்டாள்.  பிரகாஷை பார்த்ததும் அப்படியே நின்றால்.  உட்கார்ந்திருந்த அவன் மெதுவே எழுந்தான். 
சில விநாடி தயகத்திற்கு பின், 'ஹலோ, ஐ அம பிரகாஷ். சுரேஷோட  friend ' .   'ஹலோ. நான் மாடில குடி இருக்கேன்.  இங்கே co-tenant.' என்று தன்னை அறிமுகப்படுதிக் கொண்டாள். 

'நான் அவன் கதையோட publishing details பத்தி பேச வந்தேன்.' அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் விழித்தான்.  'oh ! sorry for the disturbance . you continue . நான் மாடில தான் இருப்பேன்.  disturb பண்ண மாடேன்.' என்றாள். 'நோ,நோ disturbance ஒன்னும் இல்லே. எங்க discussion ஓவர். ஜஸ்ட் அவன சமைக்க சொல்லி வேல வாங்கிடுருந்தேன்.   நீங்களும் வாங்களேன் சாப்படலாம்.' அவளை அழைத்தான் பிரகாஷ்.
'இல்லே இருக்கட்டும். பரவா இல்லே. Thank you. நான்  ரூமுக்கு  போறேன் ' கூறிவிட்டு  படி  ஏறினாள்.  'அன்னிகோடா தோசைக்கு compensationnu நெனச்சிகொங்க' சொல்லிக்கொண்டே சுரேஷ் வந்தான்.

'ஹாய். உம.. ஓகே.. டென் minutes ல   வரேன். நீங்க வெயிட் பண்ண வேண்டாம்' சொல்லி விட்டு தனது ரூமிற்கு ஓடி கதவை சாதினாள்.
அவள் தலை மறைந்ததும், பிரகாஷ் சுரேஷை முற்றுகை இட்டான்.  'டேய், கோ-டெனன்ட் நு சொன்னியே, பொண்ணு நு சொன்னியாட?' காரமாய் கேட்டான். 'உனக்கு எதுக்கு சொல்லணும். Just a co-டெனன்ட், அவ்வளோ தானே.' தட்டை எடுத்துக்கொண்டே பதிலளித்தான் சுரேஷ்.

'ஒரு பொண்ணுடா. சரி விடு.  பேரு என்ன சொல்லு' கேட்டான் பிரகாஷ். 'தெரியாது' பதில் வந்தது. அவனை முறைத்துவிட்டு 'கடவுள், தேவ இல்லாதவங்களுக்கு தான் எல்லாமே தருவான்' என்று புலம்பிவிட்டு, 'நீ ஒன்னும் சப்டவேண்டாம். கொண்ட இங்கே.' என அவன் தட்டையும் பிரகாஷே பிடுங்கி கொண்டு maggie - ஐ விழுங்க ஆரம்பித்தான். 

மாடியிலிருந்து அவள் வந்தாள்.  சுரேஷிற்கு நன்றி கூறிவிட்டு தனது தட்டை எடுத்துக்கொண்டாள். 'நீங்க சாப்படல?' சுரேஷை கேட்டாள். 'நான் சாப்டா  அவன் சாப்டா மாதிரி தான். இல்லேடா' பிரகாஷ் பதிலளித்தான். அவள் புன்னகைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

'நான் எனக்கு செஞ்சிகப்போறேன். யாருக்காவது இன்னும் வேனுமா?' கேட்டான் சுரேஷ். இருவரும் வேண்டாம் என்று தலை ஆட்டினர்.  அவன் மீண்டும் சமையலறைக்குள் சென்றான்.  பிரகாஷ் அவளை நோக்கி 'இங்கே உக்காந்துக்கொங்க' என்று அவன் எழுந்து கொண்டு சோபாவை காட்டினான்.  அவள் அமர்ந்ததும் அருகில் இருந்த சாரில் அமர்ந்தான்.

'என் பேர் பிரகாஷ்.  அவனோட எடிட்டர் avum   இருக்கேன்.' என்றான் மீண்டும்.  அவள் சிரித்து விடு 'என் பேரு ..' என்று சொல்லும் போது பிரகாஷ் பலமாகத் தும்பினான்.  காதலி தீடிவைத்து அவள் பெயரை கேட்க காத்துக் கொண்டிருந்த சுறேஷிருக்கு ஒன்றும் கேட்கவில்லை.  பிரகாஷை நன்றாக கறித்தான்.
'I am sorry.  Excuse me' பிரகாஷ் கைகுட்டையால் வாயை மூடினான். ' Thats ok' என்றாள்.  'முகஸ்துதிக்கு சொல்லலே, ஆனா உங்களுக்கு ஏத்த  பேரு.' என்றான் பிரகாஷ்.  'Oh! I am flattered.' என்று அவள் பதிலுக்கு புன்னகைத்தாள். அவர்கள் இருவரும் புன்னகைப்பதை பார்த்துக்கொண்டே சுரேஷ் வெளியே வந்தான்.

'தேங்க்ஸ் maggieku '     என்றாள் அவனைப்பார்த்து. 'இல்லே, அண்ணியோட தோசைக்கு compensation தான்' என்றான். ' அன்னிகப்பரம் உங்கள பாக்கள. மூணு  நாள் ஆச்சுனு நெனைக்கறேன்' என்றாள்.

'ஆமா என்னோட அடுத்த கதைக்கு பிளாட் யோசிசிட்டு இருக்கேன். பஸ்-ஸ்டாண்ட்ல தான் உக்காந்து யோசிப்பேன்.  அங்கே ஏதாவது inspiration கெடைக்கும். உங்கள கூட ஒரு நாள் பாத்தேன்.' என்றான்.

'ஒ அப்படியா. பிளாட் ஏதும் கெடச்சுதா?' கேட்டாள். 'க்ரைம்  நோவேல் எழுதலாம்னு இருக்கேன். எனக்கு அது கொஞ்சம் கஷ்டம். so எனக்கு நானே challenge எடுத்துருக்கேன் இந்ததடவ.' என்றான். 'உன்னக்கு மட்டுமா கஷ்டம். நீ எழுதறத படிக்கற என்னக்கும் தான் கஷ்டம்' என்றான் பிரகாஷ். அவள் மிகவும் சிறியதாக புன்னகைத்தாள். 

'சரி, நான் கெளம்பறேன்.  உன்னோட புக், பைனல் எடிட்டிங் வேல முடிஞ்சி அடுத்த மாசம் புப்ளிஷ் ஆகிடும். நீ எழுத போற க்ரைம விட இது நல்லாவே இருக்கும்' என்று அவனிடம் கூறிவிட்டு, 'நைஸ் மீட்டிங் யு' என இவளிடம் சிரித்துவிட்டு, தனது கார்டை கொடுத்துவிட்டு,  கிளம்பினான் பிரகாஷ்.

அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான் சுரேஷ். 'என்னங்க உங்க பிரண்டு நீங்க எழுத ஆரம்பிகரதுகு முன்னவே இப்படி சொல்லறாங்க?' அவனிடம் கேட்டாள்.  'ஒம்போது வருஷமா கூட குப்ப கொட்டரானே.' பதிலளித்தான். 'நீங்க எழுதின புக்ஸ் படிச்சிருக்கேன்' என்றாள். 'ஒ தேங்க்ஸ். பிடிச்சிருந்துதா?' கேட்டான். 'ம்ம் ஆனா உங்க ஸ்டோரீஸ் ல எப்பவும் லேடீஸ் stronga இருப்பாங்க.யார் influence ?' சிரித்தாள்.  

'வேற யாரு, எங்க அம்மா தான்.  பக்கதிலேந்து  பாத்திருக்கேன்ல. என்ன கேட்ட எல்லா லேடிசும் ஸ்ட்ராங்  தான் மென்டலி. அவங்க அப்படி இருக்கறதால தான் குடும்பம் குடும்பமா இருக்கும்.  என்ன பொருத்தவரைக்கும், அப்பாக்கள் பசங்களுக்கு செல்லம் கொடுக்க அம்மா நல்லபடியா வளக்க.  கரெக்டா?' கேட்டான்.

அவள் அப்படியே அவனை பார்த்தாள். இருவரும் இல்லாத இளைய வயதில் இவன் எப்படி கஷ்டப்படிருப்பன் என்று நினைத்தாள்.  ஆனால் கூற முடியவில்லை. 'என்ன மதர் காம்ப்ளெக்ஸ் நு நைகரிங்கள நினைகரிங்களா? நீங்க என்ன நெனச்சாலும் சரி.  என்னோட heroines எல்லோரும் என்னோட அம்மாவோட பிரதி பிம்பங்கள் தான்.' என்றான்.

'அது இல்லே. உங்களுக்கு உங்க அம்மா மேல எவ்வளோ affection நு நெனச்சேன்.' என்றாள். அவன் வெறுமையான சிரிப்பை அவளிடம் உதிர்த்தான். 

'சரி, நான் தூங்க போறேன்.  அவன்குட கொஞ்ச நேரம் பேசினா கூட மோல மூளை காஞ்சி போய்டும்.  தலைய சாப்டுடுவான்.  Good night. நீங்க தூங்கல?' கேட்டான்.
'இல்லே, நாளைக்கு சண்டே ல.  கொஞ்ச நேரம் T.V. பாத்துட்டு அப்பறம் தான் தூங்கப்போறேன்.' என்றாள்.'O.K. Good night then' என்று  விடை  பெற்றுக் கொண்டு, தனது ரூமிற்கு சென்று தாளிட்டான். 

சடாரென்று, தனது மொபைலை  எடுத்து பிரகாஷின் எண்ணை அழுத்தினான், அவன் எடுத்தும், 'டேய், பேரென்னடா?' கேட்டான்.  மறுமுனையில் பலமான சிரிப்பு அடங்கிய பின்னர், 'நீ போன் பண்ணுவேன்னு தெரியுன்டா.   பேர் சொல்ல முடியாது.  அவங்களே சொல்லலேனா, நா ஏன் சொல்லணும்? உன்னக்கு நல்ல வேணும்டா. ஆனா ஒரு க்ளு தரேன்.  அவங்களுக்கு ஏத்த பேரு தான்' என்று சொல்லி திரும்ப சிரித்துவிட்டு வைத்தான் பிரகாஷ்.

சுரேஷ் யோசித்துக்கொண்டே படுத்தான்.  'அழகினு இருக்காது. அவளோ அழகு நு சொல்லமுடியாது. அப்போ என்ன பேரா இருக்கும்?' என யோசித்துக்கொண்டே எப்போது  தூங்கினோம் என்று தெரியாமலே தூங்கி போனான் சுரேஷ்

Monday, June 21, 2010

Oru kathasiriyarin kathai - 6

6. மன்னிப்பு

சுரேஷ் கண் விழித்து படுகையில் எழுந்து உட்கார்ந்தான்.  மேலே மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தான். மணி பத்தை தாண்டி இருந்தது.  எழுந்து பல் தேய்த்து குளித்து வெளியே வந்தான். ரூம் கதவில் எதோ ஓட்டப்படிருந்ததை பார்த்தான்.

'Good Morning. இன்னிக்கு எவனிங் 7 O'clock பூட்டு மாத வர சொல்லறேன்.  அதுக்கு முன்னாடி நான் வந்திடறேன். சுப்போசே நான் வரதுக்குள்ள அந்த ஆள் வந்துடங்கன்ன, கொஞ்சம் பாத்க்கொங்க ப்ளீஸ். தேங்க்ஸ் இன் அட்வான்ஸ் '  - மாடி போர்சன்
என்று எழுதியிருந்தது.  கதவிலிருந்து அதை கிழித்து கசக்கி போடன்.  சமையலறைக்குள் நுழைந்தான். காபி இருந்தது.  கலந்து கொண்டான்.  மீதி பாலை fridgeil வைத்தான்.  T.V. ஆன் செய்து விட்டு சோபாவில் உட்கார்ந்து சன்னலை மாற்ற ஆரம்பித்தான்.

சற்று நேரம் கழித்து கதவை பூடிகொண்டு வெளியே சென்றான்.  சிறிது நேரம் கழித்து அப்படியே நடந்து பொய் கொண்டிருந்தான்.  பின்னர் ஒரு பஸ்-ஸ்டாப் பெஞ்சில் உட்கார்ந்து தனது அடுத்த கதையின் கருவை உருவாக்க யோசிக்க ஆரம்பித்தான்.  தான் தற்பொழுது எழுதிய 'அபிமானி' ஒரு காதல் கதை என்பதால், க்ரைம் நாவலை எழுத நினைத்தான்.  நேரம் ஓடிக்கொண்டு போனது.  திடிரென்று வயறு சங்கொலி எழுப்பவே, தான் எப்பொழுதும் செல்லும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வீடு திரும்பினான்.  ஆகஸ்டு வெயில் மண்டையை பிளக்கவே,படுத்தான்.

மணி நான்கு அடிக்கும் போது எழுந்தான்.  தனது அறையை சுற்றிப்பர்தான். சுதாம் செய்யும் நேரம் வந்து விட்டது என அது அறிவித்தது.  தனது computeril இருந்து ஆரம்பித்தான்.  பின்னர் புக்-செல்ப் ஐ சரி செய்தான்.  படுக்கையை உதறிப் போடான்.  ஜன்னலின் ஸ்க்ரீன் மிகவும்அழுக்காய் இருந்ததால், கழற்றினான்.  நாளை துவைபதற்காக எடுத்து வைத்திருந்த தனது துணிகளுடன் அதனை சேர்த்தான்.  குப்பையை பெருக்கி அள்ளி தோட்டத்தில் கொண்டு போட்டான்.  அங்கேயே முகம் கை-கால் கழுவிக்கொண்டான். காற்று அருமையாக விசியதால், சிறிது நேரம் அங்கே இருந்த துணி துவைக்கும் கல் மேல் அமர்ந்தான். 

தோட்டத்தை சுற்றிப்பர்தான்.  அத்தனை சுத்தமாக இல்லை இருந்தாலும் ஓரளவுக்கு குப்பை அகற்றப்படிருந்தது.  துளசி மாடத்தில் சிறிய துளசி கன்று புது வரவாகத் தெரிந்தது. அப்படியேஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

வாசல் கதவு திறக்கும் சத்தம் கேடு எட்டிப் பார்த்தான்.  அவள் உள்ளே நுழைந்தாள்.  அப்பொழுதுதான், பொழுது சாய்ந்ததை கவனித்தான்.  ஆனாலும் இன்னும் சூரியன் அஸ்தமனம் ஆகவில்லை.  மணி என்ன என்று ஹாலில் சென்று பார்த்தான்.  ஆறறை ஆகியிருந்தது. 

மாடியிலிருந்து அவள் 'தப தப'என்று ஓடி வந்தாள். திரும்பி பார்த்தான்.  பிரெஷ் ஆகி வேறு சுடிதாரில் இருந்தாள்.  இவனை பார்த்ததும், நின்று, 'நான் பொய் அவங்களை கூடிடுவரேன்' என்றாள். 

'ம்ம்' என்று இவனது பத்தி வருவதற்குள் கதவிடம் சென்றிருந்தாள்.  பாத்து நிமிடம் கழித்து வந்தாள் - கூட ஒரு ஆள்.  அவன், கதவிலிருந்து பூட்டை கழட்ற ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம், புது பூட்டு மாற்றப்பட்டது.  அவன் பைசாவை வாங்கி கொண்டு கிளம்பினான்.  இதில் எதிலும் சுரேஷ் பங்கேற்கவில்லை.

'இந்தாங்க உங்க சாவி' என்று T.V.  பார்த்துக் கொண்டிருந்த சுரேஷிடம்  கொடுத்தாள்.  அதை வாங்கிக் கொண்டு அவளை பார்த்தான்.  அவள் முகத்தில் கோவம் குடி கொண்டிருந்தது. 

'நீங்க இல்லேனா பதுக சொன்னிங்க.  நீங்க இருந்ததால, நான் disturb பண்ணல .  நீங்க கேட்டிருந்த வந்திருப்பேன்' என்றான்.  அவள் சிறு நொடி தாமதித்து, ' கூப்டிருக்கலம் தான் சார், நீங்களா வருவிங்கன்னு நெனச்சேன்' என்றாள்.

'சார் ஆ?' என்றான்.

'சுரேஷ் நு கூப்படலாம்    ஆனா அப்போ நீங்க என் பேர கூப்படனும் அதுக்கு நான் என் பேர சொல்லணும். நீங்க எனக்கு தேவையல்லாத விஷயம் நு சொல்லுவிங்க. எதுக்கு தேவையல்லாத மன கசப்பு' என்றாள்.

மிக செலாக புன்னகைதான்.  பின் அவளிடம், 'சாரி, அன்னிக்கு மாமி சுட்டேன் ஆ, வந்து நீங்க இங்கே தங்கணும் நு சொன்னதால தான் அப்படி பேசிட்டேன். சாரி என்றான்'

என்ன டைம் ஆனாலும் சரி அம்மாவுக்கு கால் பண்ணனும் என்று நினைத்துக்கொண்டாள். 

'actuala, மாமி உங்களுக்கு ஒரு வாரமா ட்ரை பண்ணிட்டு தான் இருந்தாங்க.  ஆனா உங்க மொபைல் 'not reachable ' நு வந்திடுருன்தது' பதிலளித்தாள்.

அப்போது தான், தட்னது மொபைல் பற்றி அவனுது ஞாபகம் வந்தது.  தனது ரூமிற்குள் சென்று, தனது desk திராவேர்-ஐ திறந்து பார்த்தான். அவனது மொபைல் உரிரற்று இருந்தது.charger -ல் போட்டு விட்டு வெளியே வந்தான்.

எனக்கு கால் பண்ணறவங்க அவ்வலோவ கெடையாது. சோ மொபைல் இருக்குங்கறதே அப்பப்ப மறந்துடுவேன்.  அதுவும் deadline கிட்ட வரும் போது.   மாமி கிட்ட  நாளைக்கு apologise பண்ணனும்.' அவளிடம் கூறினான்.

'சரி, நான் தோசை வாக்க போறேன்'  என்று சமையலறைக்குள் நுழைந்தவள், சட்டென்று திரும்பி மாடிக்கு சென்று pursue உடன் வெளியே கிளம்பினாள்.

'என்னாச்சு?' சுரேஷ் வினவினான்.

'ஒண்ணும் இல்லே, உப்பு வாங்க மறந்துட்டேன், அதான்' என்றாள்.

'ம,  நான் வாங்கி வரேன். ஆனா நான் ரெண்டு தோசை வாத்துக்கட்டா?' கேட்டான்.

'ரெண்டு தானா நானே வாத்து தரேன். இந்தாங்க பைசா' என்றாள்.

அவளை பார்த்துவிட்டு, 'நானும் சம்பதிகறவன் தான்' என்று கூறிவிட்டு தனது purse - ஐ எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.

கடையில் உப்புடன், கண்ணெதிரில் தொங்கிக்கொண்டிருந்த இட்லி மிளகாய் பொடி உடன் வீடு திரும்பினான்.

Wednesday, June 16, 2010

OKK - 5

5. காபி 

சுரேஷ் திடிரென்று எழுந்தான், கடிகாரத்தை பார்த்தன்.  6.45 ஐ காட்டியது.  இன்று deadline என்பதால், இரவு வெகு நேரம் வரை முழித்திருந்தான். இந்நேரத்தில் அவன் எழுந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அவனால் கண் விழிக்காமல் இருக்க முடியவில்லை.  கதவை மெதுவாகத் திறந்து கொண்டு எட்டிப்பார்த்தான்.  சமயரலரையில் நடமாட்டம் தெரிந்தது.  தன்னை எழுப்பியது என்ன என்று புரிந்தது. 

அவள் கையில் சூடாக ஆவி பறக்கும் டம்பளருடன் ஹாலுக்குள் வந்தால்.  இவனை பார்த்துவிட்டு,

'ஒ, முழிசிடின்களா! சாரி டிச்டுர்ப் பண்ணிருந்த என்று சொல்லிவிட்டு தொடதிருக்கு போனால். அங்கிருந்து, 'ம்ம், காபி dicoction இருக்கு. உங்ககுக்காக போடல. ரெண்டு ஸ்பூன் அட்லீஸ்ட் போட தான் ஸ்ட்ரோங்க இருக்கும். உங்களுக்கு வேணும்னா எடுத்துகோங்க' என்றபடி படியில் உட்கார்ந்து தனது காபி யை உரிய ஆரம்பித்தால்.  அவளது டம்பளர் முடிந்ததும் எழுந்து பொய் அதை அலம்பி வைத்துவிட்டு தந்து ரூமிற்கு ஏறினாள்.  அவன் அப்போதும் தனது ரூமின் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.  அவள் மேலே ஏறி போனதும் சமையலறைக்குள் நுழைந்தான்.

' பில்ட்டர் காபி யோட வாசனைக்கு சரணடையாத தமிழன் கிடையாது' என்று நினைத்துக்கொண்டே டம்ப்ளரை எடுத்தான்.  தான் பில்ட்டர் காபி குடித்து எவ்வளோ வருஷம் ஆகியது என்று நினைத்துக்கொண்டே T V  ஆன் செய்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தான். மிகப் பொறுமையாக ஊதிக்கொண்டே குடிக்க ஆரம்பித்தான்.  அவன் முக்கால் வாசி குதித்துக் முடித்திருந்தான். அவள், மாடியிலிருந்து தடதட வென்று படியில் இறங்கி வந்து வாசலை நோக்கி ஓடினாள். 

சுரேஷ், ' காபி கு தேங்க்ஸ்' என்றான். திரும்பிப்பர்காமல், அவள் ஒரு கணம் தாமதித்து, 'மாகிகு தேங்க்ஸ்'  என்று கூறிவிட்டு கதவை சாத்திவிட்டு ஓடினாள்.

காபியை முடித்துவிட்டு தனது ட்ய்பிங் ஐ தொடரப்போனான். என்று மதியம் சென்று கொடுத்துவிட வேண்டும்  என்று எண்ணிக் கொண்டான். கடைசி நிமிட செக்கிங் செய்ய ஆரம்பித்தான்.

மத்தியானம் அவன் காபி செய்யப்பட்டிருந்த pendrive உடன் கிளம்பினான்.  அந்த பப்ளிஷிங் கம்பனி தேனாம்பேட்டையில்  இருந்தது. அவன் போய் தனது கதையை கொடுத்துவிட்டு பிரகாஷுடன் பேசிவிட்டு திரும்பும்போது மணி எட்டாகி விட்டது.

கதவு பூட்டிருக்கவில்லை.  அவள் வந்திருப்பாள் என்று யூகித்தான். கதவை திறக்க முயன்றான். முடியவில்லை. 'ச்சே' என்றபடி பெல் அடித்தான்.  ஒரு நிமிடத்தில் கதவு திறந்தது. அவள் மொபிலில் பேசிக் கொண்டிருந்தாள்.  திறந்து விடு சமையலறைக்குள் போய் விட்டாள். 

'ஆமாம் மாமி. பால்சுத்தமா திரிஞ்சி போச்சு. காபி சாப்டலாம் நு ஆசை ஆசையா வந்தேன்' அவள் கூறிக்கொண்டிருந்தாள். . 

';;;;;;'

'இல்லே மாமி. வேண்டாம். இதுக்காக போய் திரும்ப பால் வாங்கணுமா? வேற வேல இல்லே. இப எப்படியும் சபடனும்' என்றாள்
'.....'
'நல்ல ஐடியா மாமி. நாளைக்கு காலைல 1/4 lt பாகெட் வாங்கிகறேன். தேங்க்ஸ் மாமி.  சரி மாமி, தேங்க்ஸ் கால் பண்ணதுக்கு. பை மாமி. ' என்று கூறி வைத்தாள்.


'ஒரு நிமிஷம்'  என்ற அவன் குரலை கேட்டு திரும்பினாள்.

'நீங்க உள்ள தாப்பா போடதிங்க. எனக்கு கஷ்டமா இருக்கு.' என்றான்

'இல்லே, நான் மாடில இருந்தேன். கீழ யார் வந்தாலும் தெரியாதுல அதான்' என்றாள்

'சே, இதுக்குதான்' என்று அவன் முடிபதற்குள், அவள்,

'Please, அரம்பிகதிங்க. இல்லத்துக்கும் 'சே, இதுக்குதான்' நு சொல்லாதிங்க. உங்களோட ப்ரிவசி உங்களுக்கு முக்கியம் agreed . அதுக்காக சும்மா சும்மா கத்த வேண்டாம். இப்போ என்ன, கதவ உள்ள தாப்பா போடா வேண்டாம் அவளோ தானே. இங்கே தெரு முனைல hardware shop பாத்தேன். இப்போ தான் auto-lock சிஸ்டம் லாம் வந்திருகுல. நாளைக்கு வந்து பிக்ஸ் பண்ண சொல்லிடறேன். இதுக்கு நான் தான் reason கரதால நானே pay  பண்ணிடறேன். எல்லா problemkum solution இருக்கும். சும்மா கதறத விட solve பண்ண பாக்கணும்' என்று பொரிந்து விட்டு தான் வங்கி வந்த தோசை மாவு பாக்கெட் ஐ கட் செய்ய ஆரம்பித்தாள்.

அவன் அங்கேயே ஸ்தம்பித்து நின்றிருந்தான். 'அப்பறம் உங்க மாகி பக்கெட்டை ரேப்லாசே பண்ணிட்டேன்' என்றாள்.

அவன் பதிலேதும் சொல்லாததால், திரும்பி பார்த்தாள். 

'உங்க காப்பிய திரும்ப கேகதிங்க. அதுக்கு பதில எவளோ வேன்னும்னாலும் மாகிய எடுத்துகோங்க. என்றான்.

'ம்ம்.. OK.' லேசாக புன்னகைத்தால்.

'அப்பறம், என்னோட ஒவ்வொரு கத்த முடிஞ்சபிறகு,  நான் மொட்டை மாடில தான் இருப்பேன்' என்றான்.

'இல்லே. எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லே. நான் மாடிக்கு போறதே இல்லே' என்றாள்.

அவன் மாடி ஏறினான்.

'ஒ! மாவுல உப்பு சேக்கணுமா. சரி நாளைக்கு உப்பு பக்கெட் வாங்கணும்,' என்று தனக்கு தானே கூறிக்கொண்டு தோசை வார்க்க ஆரம்பித்தாள் -- தனக்கு மட்டும்.