Thursday, July 8, 2010

Oru kathasiriyarin kathai - 8

8. ஞாயிறு

அவளுக்கு ஞாயிற்றுக் கிழமை பொழுது விடிந்தது - ஒன்பது மணிக்கு. பல் தேய்த்து முகம் அலம்பியும் தூக்கம் கலையவில்லை, கொட்டாவி விட்டுக்கொண்டே கிழிறங்கி வந்தாள். தோட்டத்துப் படியில் அவன் உட்கார்ந்திருப்பதை கண்டு நின்றாள்.


'Good Morning, சீக்கரம் எழுந்துடிங்க Sunday?' என்றாள்.


'Morning, எனக்கு எது sunday monday எல்லாம், deadline , offtime தான்' பதிலளித்தான்.

காபி போட்டாள். இருவரும் குடித்தனர். 'தேங்க்ஸ் காபிக்கு. டெய்லி டிச்டுர்ப் பண்ணறேன்' என்றான்.

'அதெல்லாம் என்னும் இல்லே, எப்படியும் ஒரு ஸ்பூன்ல decoction எறங்காது and again , நீங்க தான் nignt பால் வாங்கி வரிங்க?' என்றாள்.

காபி குடித்து முடித்ததும் அவள் கேட்டாள், 'washing mashine இருக்குனு மாமி சொன்னங்க, எங்கேனு தெரியல' கேட்டாள்

'என் ரூம்ல' பதில் வந்தது. 'இனிக்கு எனக்கு வேணும்' கேட்டாள். அவன் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லவில்லை.

'என்ன, "இதுக்கு தான்னு" யோசிக்கரிங்கள?' கேட்டாள். 'இல்லே, அதான் எல்லாத்துக்கும் solution இருக்கும்னு சொன்னிங்களே, அத தான் யோசிக்கறேன், எங்கே பிக்ஸ் பண்ணறதுன்னு' என்றான்

அவள் பதிலேதும் சொல்லாமல் சின்ன புன்னகையுடன் நின்றிருந்தாள். இரண்டு நிமிடத்திற்கு பிறகு எழுந்தான், மாசினை இழுத்து வந்தான்,
'கொஞ்சம் unconfortable -a தான் இருக்கும்' என்று கூறிவிட்டு, kitchanilirutha plug -il சொருகி, மேலும் இழுத்து தோட்டத்து wash basinil connect செய்தான். அவன் கூறியது போல் wire -ai தூக்கிவிட்டு குனித்து தான் போக வேண்டி இருந்தது. 'thankyou' சொன்னாள்.

'நோ problem ' கூறிவிட்டு, தன் ரூமிற்கு சென்றுவிட்டான். அவள் மாடிக்கு சென்று தன் துணியை எடுத்துக்கொண்டு வந்தாள். நேற்றே வங்கி வந்திருந்த surf -aiyum போட்டாள். machineai on செய்தால். அது ஓடிக்கொண்டிருக்க, வீடு பெருக்கினாள். முதல் ரவுண்டு முடியும் பொது அவளும் முடித்திருந்தாள்.


அவன் வெளியே சென்றதை தோட்டத்திலிருந்து பார்த்தாள். இரண்டாவது roundai போட்டுவிட்டு, தான் வாங்கி வைத்திருந்த மாகியை எடுத்து அடுப்பில் போட்டாள். அது ஆனதும், தட்டில் போட்டுக்கொண்டு, T V முன் ஐக்கியமானாள். சாப்பிட்டு முடித்து எழுந்திருக்க மனமில்லாமல், அப்படியே T V பார்த்க்கொண்டிருந்தாள். மணி 12 ஆகும் போது அவன் வந்தான். கையில் பேப்பர் bundle. கதவை சாதிக்கொண்டான். அவள் அவன் கதவை சில வினாடிகள் பார்த்துவிட்டு தன் கவனத்தை, T V இல் செலுத்தினாள். அதற்குள், machine அழைக்கவே, சென்று அதை நிறுத்திவிட்டு துணிகளை உலர்த்தினால் , machineai , தள்ளி wash basin பக்கத்தில் வைத்தாள். திரும்பவும் வயறு பசிக்கவே, என்ன சமையல் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள். மாடியில் அவள் மொபைல் அலறவே ஓடி சென்று அதை எடுத்தாள்.

'சொல்லுமா' என்றாள்
'என்ன பண்ணறே?' அம்மா கேட்டாள்
'அத தான்யோசிசிகிடு இருக்கேன்' சிரித்தால்
'துணி தொசிடிய?'
'ம்ம் இபோ தான் ஆச்சு. லஞ்ச் தான் என்ன பண்ணறதுன்னு தெரியல'
'இங்கே வரியா? உனக்கு என்ன வேணும்னு சொல்லு;' கணிவாகக்கேட்டல்
'வரலாம் தான் ஆனா அங்கே வந்தேன்னா, திரும்ப இங்கே வர மனசு வராதே. காலைல எழுந்தா உன் கையால காபி, குளிச்சிட்டு வந்த டிபன் ரெடி சாயங்காலம் விட்டுக்கு வந்தாலும் அதே routine , நிம்மதியா இருந்தேன், ஆனா இங்கே எல்லாம் நானே பண்ண வேண்டிருக்கு அதன் அங்கே வந்த இங்கே வர பிடிக்காது. அப்பாவும் எதாவது வாய கிளருவாறு' சிணுங்கினாள்
'நீ செய்யறது அப்படி. ஆனா இபோவவது உனக்கு புரியும்ல உங்கள கேளப்ப நான் எவ்வளோ பாடு படறேன் நு. நல்லது தான் நீ தனிய பொன்னது ஆனா அடுத்தவாரம் சண்டே இங்கே வந்துடு'
'அம்மா பேசாம இப்போ அப்படியே துங்கிட்டு evening போய் எதாவது சாட் item சாப்டலாம் நு இருக்கேன். சூப்பர் ஐடியா ல' என்றாள் கொஞ்சம் மகிழ்ச்சியாக.
'என்னடி இப்படி. next time உன்னை பாக்கும் போது noodles மாதிரி தான் இருப்பே போலிருக்கே' என்றாள் அம்மா கொஞ்சம் கவலையாக
விடுமா இனிக்கு ஒரு நாள் தான் இப்படி. வீக் டயஸ் ல ஒழுங்க தான் சாப்டறேன் சோ டோன்ட் வோர்ருய்' என்றாள்
'என்னவோ பண்ணு. ஆனா முடியாத பக்ஷத்துல இங்கே வந்துடு' என்றாள் அம்மா
'கண்டிப்பா மா இப்போ, தூங்க போறேன். டாட்டா' என்று கூறி விடை பெற்றாள்.

அங்கே அப்பா, -

'என்ன உன் பொண்ணு இனிக்கு வரலாமா?' கேட்டார்

'இல்லையாம்' மெதுவாகக்க் கூறினாள் அம்மா

'அப்போ இனிக்கும் ரசமும் மோரும் தானா?' வெறுப்பாக கேட்டார்

'அவ அங்கே அது கூட இல்லாம இருக்கா, நாம எப்படி விதவிதமா சாப்டறது?'

'அது அவ தப்பு, அப்பளம் கூட இல்லாம என்ன சண்டே. நீ அவளுக்காக பத்தியம் இரு. நான் என் இருக்கணும்?' என்று குதித்தார்.

'எனக்கு கம்பெனி' என்று அமைதியாக கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் அம்மா

இங்கே இவள், பானி பூரியும் சன்னா மசாலாவும் நினைத்தபடியே தூங்க ஆரம்பித்தாள்

No comments:

Post a Comment