Thursday, March 19, 2009

ஒரு கதாசிரியரின் கதை - 3

பகுதி - 3 - சுரேஷ்


உள்ளே சென்ற மாமியும் அவளும் ஒரு நிமிடம் சுற்றிப் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டனர். ‘மாமி, நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். நீங்க உக்காந்துகோங்க’ என்றாள்.
‘எங்க உக்கார. என் புடவ என்ன திட்டும், இதுல உக்காந்தா. நீ ஒட்டட அடிச்சு பெருக்கு, நான் இதெல்லாம் தொடச்சி வெக்கறேன். ’ மாமி ஐடியா தந்தாள்.

‘ஓகே மாமி. ஆனா முடியலேனா வெச்சுடுங்க, நான் பாத்துக்கறேன். இருங்க ஒரு டவல் கொண்டுவரேன். மூக்குல கட்டிக்கோங்க ’ என்றபடி படி ஏறினாள்.

‘சரிடீம்மா. நான், துடப்பமும் ஒட்டடகோலும் எடுத்து வெக்கறேன்’ என்றபடி மாமி தோட்டத்திற்கு சென்றாள்.

விரைவில் இருவரும், தத்தம் வேலையை செய்ய ஆரம்பித்தனர். இருபது நிமிடங்களில் ஒட்டடை வேலையை முடித்தாள். மாமி டீவீ, பிரிட்ஜ் எல்லாவற்றையும் மும்முரமாகத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

‘மாமி ஹெல்ப் வேணுமா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகோங்க’ என்றபடி மேடையில் அமர்ந்திருந்த ஸ்டவுடன் போராடிக்கொண்டிருந்த மாமியிடம் போய் நின்றாள்.

‘ஆ, கை வலிக்குது. அவனயும் ஹெல்புக்கு கூப்டுக்கலாம் நெனச்சென். ஆனா இப்போ பக்கத்துல கூட போக முடியாது. அக்சுலா சொல்லப்போனா, நீ இங்க தங்கப் போறேனு சொன்னதும் அவன் மண்டைய ஆட்டிட்டு அவன் ரூமுகுள்ள போய் அடஞ்சுகுவானு தான் நெனச்சேன். இப்படி குதிப்பான்னு நெனச்சுக்கூட பாக்கல.’ என்று மாமி கூறிக்கொண்டே தன் வலது கையை பிடித்துவிட்டுக்கொண்டாள்.

சிறிது மௌனத்திற்கு பிறகு, மாமி தொடர்ந்தாள். ‘அவன் காலேஜ் வரைக்கும் சோசல் டைப்பாதான் இருந்தான். அவனும் அவன் அம்மவும் தான். மைலாப்பூர்ல தான் இருந்தாங்க. அவன் சின்ன வயசுலுந்து அவன எனக்கு தெரியும்.
அவன் அம்மா ரொம்ப ஒண்ணும் படிக்கல. ஒரு மெடிக்கல் ஷாப்ல தான் வேல. ரொம்ப வருஷம் அங்க இருந்தா. அப்பறம் லாப் அஸிஸ்டண்டுக்கு படிச்சு அந்த மெடிகல் ஷாப்க்கு சொந்தமான லாபுக்கு இன்சார்ஜ் ஆனா.
ரொம்ப சின்ன வயசுலேயே அவன் அப்பா போயிட்டு. அம்மா தான் தனியா வளத்தா. அவங்களோட நெலமய சொல்லி வளத்ததால அவனும் அவள அநாவசிமா எதுக்கும் தொந்தரவு பண்ணதில்ல. காலைல பேப்பர் டெலிகதறல்வர் பண்ணி அவனும் அவனால முடிஞ்சத செஞ்சிட்டிருந்தான். அவங்க ரெண்டு பேரயும் ரிலாக்ஸுடா வெச்சிருத்தே அவனோட எழுத்துக்கள் தான்.
முக்காவாசி நேரம் அவன் தனியா இருந்ததால, அவன் அம்மா “நீ எத பக்கும் போதும் அத பத்ன உன் மனசுல தோன்றத எழுதி வையு. நான் வீட்டுக்கு வந்ததும் படிக்கறேன். ஸ்கூல நடந்தது பிரண்டு கூட நடந்தது எதுனாலும் எழுது” னு சொல்லிருந்தா. அப்போ எழுத ஆரம்பிசவன் தான். எழுதி எழுதி அவன் கற்பன திறன் வளந்தது. கத கவதனு எழுத ஆரம்பிச்சான்.
நைட் சாப்டும் போது அவன் எழுதினத ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணுவாங்க. அவ இவனோட காலே செகண்டு இயர்ல போய் சேந்துட்டா. இவன்கிட கடசியா கேட்டுக்கிட்டது - காலேஜ எப்படியும் முடிச்சுடு, எழுதறத என்னிக்கும் நிறுத்தாத – இது ரெண்டும் தான்.
லாப்ல இருந்ததால அவ நெலம அவளுக்கு முன்னமே தெரிஞ்சிருந்துது. ஒரு வருஷ வாடகய அட்வான்ஸா பே பண்ணிருந்தா. நம்பினா நம்பு, அவளோட கடசி காரியத்துக்காகர செலவு வர தனித்தனியா கவர் போட்டு வச்சிருந்தா. அத பாத்ததும் அவன் கதறின கதறல், எனக்கு இப்போ நெனச்சாலும் அழுக வருது.’ கண்ணை துடைத்துக்கொண்டாள் மாமி.
மாமி தொடர்ந்தாள். ‘அவன் பிரண்டு கார்தி தான் கூட முழுக்க முழுக்க இருந்தான். காலேஜுல லிடேரச்சர் படிச்சுகிட்டு இருந்லும், மாக்ஸ் நல்லா போடுவான். டியுசன் எடுது தன் செலவ பாத்துகிட்டிருந்தான். அந்த பசங்க கிட்ட ரெணடு மாச டியுசன் பீஸ் அட்வான்ஸா வாங்கி, அவ காரியத்த முடிசான். அவ எடுத்து வெச்சிருந்த கவர் இன்னி வரைக்கும் அவன் கிட்ட இருக்குனு நெனக்கறேன்.’ மாமி முடிக்கும் போது இருவரும் கண்ணீரோடு இருந்தனர்.
‘இன்னி வரைக்கும் கார்தி தான் அவன் பிரண்டு. கார்திக்கு ஒரு வார பத்திரிகையோட எடிட்டர தெரிஞ்சிருந்தது. இவன இன்ரொடியுஸ் பண்ணினான். இவனோட ஒரு பக்க கதை, சிறுகதை அவங்க பப்ளிஷ் பண்ணாங்க. டியுசன், கதை, பேப்பர் டெலிவரி இதுல வந்த பணத்த வச்சு எப்படியோ காலேஜ் முடிச்சான். ஸ்காலர்ஷிபும் இருந்ததால சுலபமாச்சு. அவன் எழுத்துகளு பிரபலமாச்சு.
காலேஜ் முடிச்சதும், ஒரு பப்ளிஷிங் கம்பெனி நாவல் எழுதி தர கேட்டுகிட்டாங்க. இவனும், சந்தோஷமா முடிச்சான். இவனோட இன்னோரு பிரண்டு தான் இவனுக்காக டைப் செஞ்சிட்ருந்தான், இவனுக்கு தெரியாததால. டெட்லைன்கு முன்னாடி நாள் அவனுக்கு போன் பண்ணி கேட்டா, அவன் என்னடான்னா, இன்னெரு பிரண்டு கூட படத்துக்கு போய்டானாம். என்னடா இப்படி பண்ணிடனு கேட்டா, “நான் உனக்கு ஹெல்பு தான் பண்ணறேன், நீ ஒண்ணும் எனக்கு சம்பளம் தரல”னு மூஞ்சுல அடிச்சுடானாம்.
இவனும் கார்தியும் போய் அந்த பையன்கிட்டேந்து, அவன் டைப் பண்ணி முடிச்ச வரைக்கும் போய் வாங்கிட்டு வந்து மீதிய கார்தி நைட் புல்லா உக்காந்து முடிச்சு தந்தானாம். கொண்டு போய் சப்மிட் பண்ணுக்கப்பறம் தான் ரெண்டு பேரும் வாய தெறந்தாங்களாம்.
இவன் கம்புயூட்டர் யூஸ் பண்ண பர்மிஷன் கேட்ருக்கான். ஆனா கார்தி, “நீனா கத்துகறத விட டைபிங் சென்டர்ல போய் கத்துகறது தான் நல்லது. தமிழ் டைபிங் அவ்வளோ இஸி இல்ல”னு அவன ஒரு இன்ஸ்டிடுட்ல சேத்தான். அங்க ஆறு மாசம் படிச்சான். இருந்த சேவிங்ச வெச்சு செகண்டு ஹாண்டு கம்பியுட்டர் வாங்கினான். அப்போலேந்து தான் இவன் இப்படி ஆனான். கிளாஸ், வீட்டுல டைபிங் பிராக்டிஸ் அப்பறம் கதை எழுதனும், எழுதினத டைப் செயணும், அவனே ப்ருப் ரீடிங்கும் பாக்க ஆரம்பிச்சான். இதெல்லாம் பண்ணிட்டு இருந்ததால வீட்டுலேயே கன்பைன் ஆகிட்டன். எல்லாரோடையும் கான்டாக்டு இல்லாம போச்சு. யாருமே வேண்டாம்னு ஆகிட்டான். இப்போ வெளில வர தெரியல.’ என்று மாமி முடிக்கும் போது சமையலறையும் குளித்திருந்தது.

‘அவனால உனக்கு ஒரு பிராப்ளமும் இருக்காது. இப்படி கத்தினாலும் நியூசன்ஸா இருக்க மாட்டான். அவன பத்தி அவ்வளோ தான்.’ என்றபடி பின் கழுத்தில் கையை வைத்து தலையை சுற்றிக்கொண்டு எக்ஸர்சைஸ் செய்தாள் மாமி.

தோட்டத்தில் இருவரும் முகம், கை-கால் அலம்பிக்கொண்டார்கள். ‘பக்கத்துல காபிடே இருக்கு. வா போய் காபி போடி வாங்கி வரலாம்’ மாமி அழைத்தாள்.

‘இல்ல மாமி, தெரு மொனைல கடை பாத்தேன். பால் பாக்கெட், புரு, சக்கர வாங்கி வரேன்.’ கூறிக்கொண்டே மாடி ஏறினாள், பர்ஸ் எடுத்துவர. வாங்கி கொண்டு வந்தாள். இருவரும் காபி குடித்து முடித்தனர். மாமி மணி பார்த்தாள். நான்கை தொட்டுக்கொண்டிருந்தது சின்ன முள்.

‘சரி நான் கெளம்பறேன். நீயும் என் கூட வா, ஏதாவது வாங்க வேண்டியிருந்தா’ மாமி அழைத்தாள்.

‘வாங்க ஏதும் இல்ல. ஆனா லோகேஷன் பாத்து வச்சுகறேன் – பஸ் ஸ்டாண்டு, கடை எல்லாம். வாங்க போகலாம்’ என்றாள். இருவரும் கதவை சாத்திக்கௌண்டு கிளம்பினர்.

3 comments:

  1. Lallu nice one, continue to write, eagerly waiting for next chapters.

    Jaan

    ReplyDelete
  2. thank you both. Keep reading and post the comments.

    ReplyDelete