Tuesday, March 24, 2009

ஒரு கதாசிரியரின் கதை - 4

4. மாகி

மாமி அவளை தெருமுனையில் இருக்கும் மளிகை கடையில் அறிமுகப்படுத்தினாள். பின் இருவரும் வண்டியில் கிளம்பினர். ஐந்து நிமிடங்களில் கூட்ரோடை அடைந்தனர். அது ஒரு மினி தி.நகர் போல் இருந்தது. துணிகடை, பாத்திரக்கடை, ஸுப்பர்மார்கட், கோயில் என சகலமும் அங்கே இருந்தது. அனைத்து வங்கிகளின் எடிஎமும் இருந்தன. அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். மாமி அவளை வீட்டிற்கு கொண்டு விடுவதாக கூறியபோது, தாமே நடந்து போய் கொள்வதாகக் கூறினாள். மாமி அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

வழியில் அனைத்து கடைகளையும் பார்த்துக் கொண்டு நடக்கலானாள். காபி டே வந்தது. காபி பொடியின் மணம் அவளை கடைக்குள் இழுத்தது. காபி பொடி வாங்கிக் கொண்டு கிளம்பினாள். ஞாயிற்று கிழமை ஆனாலும் கூட்டத்திற்கு குறையில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். வீட்டிற்கு வந்த போது மணி ஆறரை. கதவை வெறுமே சாத்திக் கொண்டு போனதால் சத்தம் இல்லாமல் உள்ளே வந்தாள். ரூமிற்கு போய் மெத்தையில் தொப்பென்று விழுந்தாள்.

‘ஆ... காலு வலிக்குது. மாமி கொண்டு விடறேன் சொன்னப்போ பேசாம, தாங்ஸ்னு ஏறிட்றிருக்கணும்.’ தன்னைத் தானே நொந்துக்கொண்டாள். சுத்தம் செய்தது, நடந்து வந்தது எல்லாம் அவளை சோர்வாக்கின. தன்னை அறியாமல் உறங்கிப்போனாள். எத்தனை நேரம் உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. அவளது மொபைல் அலறியதில் திடுகிட்டு எழுந்தாள். தனது கைப்பையினுள் அதனை தேடி எடுத்தாள்.

‘ஹலோ’ கண்னை முடிக்கொண்டே பேசினாள்.

‘என்னடி பண்ற. அதுக்குள்ள துங்கிடியா’ எதிர்முனை அதட்டியது.

நன்றாக கண்ணை விழித்துக் கொண்டு ‘அம்மா, தூங்கல மா. தூங்கி எழுந்துட்டேன். ஆறு மணிக்கே’ என்றாள்.

‘என்னடி சந்திய வேளைல. தனியா போய் ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஆகிட்டியே ’ சத்தம் போட்டாள் அம்மா.

‘ஆரம்பிக்காதம்மா. டயர்டா இருந்தது. ஐஞ்சு நிமிஷம் படுத்துக்கலாம்னு நெனச்சேன். அப்படியே தூங்கிட்டேன். விடு பிளிஸ். தோ எழுந்துட்டேன்’ என்றபடி பெட்டை விட்டு எழுந்தாள்.

‘அப்பறம், போனதும் பெரிசா இடி விழுந்துதாமே. கேள்விப்பட்டேன்.’ கேட்டாள் அம்மா.

‘ஹா ஹா. ஆமாம்மா. நாங்க ரெண்டு பேருமே எதர்பாக்கல. ஆனா பிராப்ளம் ஏதும் வரும்னு தோணல.அப்பொ கதவ டமால்னது தான். இதுவர தறக்கல. அப்பாகிட்ட மட்டும் சொல்லாத’ என்றாள்.

‘நான் எங்க சொல்லறது. மாமி,நீங்க ரெண்டு பேரும் சுத்தம் பண்னது, கடைதெருக்கு போனு எல்லாம் சொன்னாங்க. அப்பா சரி பிராப்ளம் ஏதும் இல்லனு கொஞ்சம் கோவத்த கொறச்சிகிட்டாரு. அப்பறம் மாமியும் நானும் கிச்சன்ல பேசிகிட்டு இருந்தோம் உன்னோட என்றிய பத்தி. அப்பா அப்போ தண்ணி குடிக்க வந்திருக்காரு. எல்லாத்தையும் கேட்டுட்டாரு. அவ்வளோ தான். காலையோட இடி வெறும் பிஜி வெடி தான்கறா மாதிரி ஒரே சத்தம். அவன் யாரு என் பொண்ணுகிட்ட அப்படி பேசனு. அவர சாளிக்கறதுக்குள்ள ஒரு வழி ஆச்சு.’ கூறினாள் அம்மா.

‘ஆமாம் அவரோட பொண்ண அவர் தான் திட்டணும்’ முணுமுணுதாள்.

‘உன்னையும் திட்டினாரு. அவனுக்கு இருக்கற அறிவு இவளுக்கு எங்க போச்சுனு, ஒரே சத்தம். எல்லா பேரன்ட்ஸும் இப்படி தான்டி. விட்டு பிடிக்கவும் மாட்டோம், விட்டு கொடுக்கவும் மாட்டோம். நீ நாளைக்கு வீட்டுக்கு வந் ஆகணும்னு ஒரே குதி. வந்திடரையா? ’ அம்மா கேட்டாள்.

‘என்னமா சொல்லற.பர்ஸ்டு நாளே பாக் டு த பெவிலியனா? ’ சிணுங்கினாள்.

‘என்னடி பண்ண சொல்லற. எவன்கிட்டயோ திட்டு வாங்கவா நாங்க உன்ன பெத்தோம். கஷ்டமா இருக்குடி’ அம்மா வருத்தப்பட்டாள்.

‘நீ திட்டும் போது ஒரு தடவயாவது கஷ்டப்பட்டிருப்பியா? ’ சிரித்தாள்.

‘அது எங்க உரிமடீ. நீ நாளைக்கு வரியா இல்லயா, அத சொல்லு.’ அம்மா கண்டிப்பானாள்.

‘அம்மா ஒரு வாரம் டைம் கொடு. அதுக்குள்ள அவங்க சாரி கேக்கலைனா நான் வந்திடரேன். பிளீஸ் டைம் கொடுமா’ கெஞ்சினாள்.

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு பதில் வந்தது. ‘சரி அடுத்த சன்டே பாக்கலாம்’

‘முடிவே பண்ணிடியாமா’ சோர்வாக கேட்டாள்.

அம்மா சிரித்தாள். ‘நீ அடுத்த சன்டே வரியோ இல்ல பிளான்படி ரெண்டு மாசத்துல வரியோ, உன் இஷ்டம் ஆனா நெக்ஸ்ட் டைம் திட்டு வாங்கிட்டு நிக்காத’

அம்மா முடிப்பதற்குள் கேட்டாள். ‘பளார்னு ஒண்ணு கொடுத்துட்ட்டுமா?’ சிரித்தபடி கேட்டாள்

‘அது உன் சாமர்தியம். பிராப்ளமே இல்லாம இருந்துப்பியோ, இல்ல அடிசிப்பிங்களோ. ஆனா ஒரு சின்ன பிராப்ளம்னாலும் அடுத்த நிமிஷம் நீ வீடுல இருக்கணும். புரியுதா. சரி, அதவிடு, சாப்டியா? ’ அம்மா கேட்டாள்.

‘இல்லமா இனிமேதான். தூங்கிடேன்ல. அம்மா, நம்ப மாட்ட இங்க பிரிட்ஜ் புல்லா வெரைடி வெரைடியா மாகி தான்மா’ பதிலளித்தாள்.

‘போச்சுடா. இதுதான் சாக்குனு 24மணி நேரமும் மாகில முழுகிடாத, கேட்டியா. சரி சாப்ட்டு தூங்கு. நாளைக்கு ஆபிஸ் போகணும்ல’ அம்மா அக்கறையானாள்.

‘சரிம்மா. நீ கவலபடாத. உனக்கே தெரியும்ல கொஞ்சம் பிராப்ளம்னாலும் நான் சொல்லவேண்டியத சொல்லிட்டு வந்துடுவேன். நீங்க ரெண்டு பேரும் பாத்துகோங்க. நாளைக்கு கால் பண்ணறேன். பை மா. ’ அம்மாவிடம் விடைபெற்றாள்.

மொபைலை அணைத்துவிட்டு முகம் கை-கால் அலம்பிக் கொண்டு கிழே இறங்கி பிள்ளையாரை கும்பிட்டாள். சமையலறைக்குள் நுழைந்து, பிரிட்ஜிலிருந்து மாகி டபுள் பாக்கெட்டை பிரித்து அடுப்பில் போட்டாள். வாசலில் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்தாள். சுரேஷ் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

‘வெளில போனதே தெரியலையே. நல்லா தூங்கிருக்கேன்.’ தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டு நின்றான்.

அவன் ஆரம்பித்தான். ‘நீங்க இருக்கறது ஞாபகம் இல்லாம பூட்டிட்டு போயிடேன்.’ முடித்தான்.

‘ஓ’ என்றாள். அதற்குள் மாகி வாசனை வெளியே வரவே, சமையலறையை திரும்பி பார்த்து, ‘மாகி பண்ணிட்டு இருக்கேன், சாப்படறீங்களா’ என்று கேட்டாள்.

‘ஒரு நிமிஷம். பூட்டிடேன்கறதுனால கில்டியா பீல் பண்ணி பேசினேன். அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்லறேன். டோன்ட் டிஸ்டர்பு மீ. நான் உங்கள சமைக்க சொல்லலியே’ கோவமாக கேட்டான்.

‘நீங்க சொல்லல. ஆனா பிரிட்ஜிலேந்து தான் மாகி எடுத்திட்டேன். கடைக்கு போனப்போ மறந்துட்டேன். அதான் சேத்து செஞ்சேன்.’ தயங்கியபடி கூறினாள்.

‘அடுத்தவங்களது எடுக்கும் போது கேக்கணும்னு கூடவா தெரியாது.’ எகிறினான்.

‘கடைக்கு இப்ப போக ரொம்ப டயர்டா இருந்தது. இங்க ஸ்டாக் நெறய இருக்கேனு எடுத்தேன், உங்ககிட்ட சொல்லிக்கலாம்னு. ’

‘உங்க இஷ்டத்துக்கு ஏதும் நெனக்காதீங்க. இதுக்கு தான் யாரும் வேண்டாம்னு இருந்தேன், மாமி சதி செஞ்சுடாங்க. ’ குரலை உயர்தினான்.

‘உங்க பர்மிஷன் இல்லாம எடுத்தது தப்பு தான். சாரி, இப்பவே கடைக்கு போய் உங்க மாகிய ரீபிளேஸ் பண்ணிடறேன். ஆனா கத்தறதுனால ஒண்ணும் சாதிக்க முடியாது’ என்று அமைதியாக கூறிவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு மாடி ஏறினாள்.

‘நான் ரீபிளேஸ்மெண்ட் கேக்கல. ஆனா என் சம்மந்தபட்ட எந்த எல்லைகுள்ளும் யாரும் வரத நான் அனுமதிக்க மாட்டேன்.’ கூறிவிட்டு தன் கூட்டிற்குள் அடைந்து கொண்டான்

அவள் கீழிறங்கி வந்தாள். சமையலறை மேடையில் சாய்ந்து கொண்டு கண் மூடினாள். ‘எனக்கு தேவயில்லாத வேல. நல்லா வேணும் எனக்கு’ தன்னை நொந்தபடி மாகியை ஒரு தட்டில் கவிழ்த்க் கொண்டு ஸ்பூணுடன் டீவீ முன் சென்று அமர்ந்து அதனை ஆன் செய்தாள். டீவீ பார்த்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

‘இத்தன நாள்ல, இப்படி டேஸ்டே இல்லாம, மாகி இருந்ததே இல்ல’ என்றெண்ணியடி மாகியை முழுங்க ஆரம்பித்தாள்.
தொடரும்....

3 comments:

  1. Hi Lal

    Really nice, continue ur gud work ...
    Ready to read next chp ....
    Jaan

    ReplyDelete
  2. akka maggi sapitachi...where is net part...too late

    ReplyDelete
  3. where is next part akka.....

    ReplyDelete