2. வீடு
‘மாமி இந்த களேபரத்துல மறந்துட்டு போயிட்டாங்க. ம்ம்.. நாமளே பாத்துக்கலாம்’ என்றெண்ணிக் கொண்டே அவள் வாசல் கேட் அருகே சென்றாள்.
வாசல் கேட்டிற்கும் உள் கேட்டிற்கும் ஐந்து அடி இடைவெளி இருக்கும். நடுவே மட்டும் சிமிண்ட் தரை மூண்று அடிக்கு இருக்க, சுற்றிலும் மண்ணாக விடப்பட்டிருந்தது. தோட்டப்பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற வீடு என எண்ணினாள்.
அந்த சிமிண்ட் தரை அப்படியே வீட்டை சுற்றிக்கொண்டு சென்றது. உட்கார்ந்து வம்படிப்பதற்கு சிமிண்டிலான மேடை சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு படி ஏறினால் உள் கேட்டினுள் ஒரு சிறிய ரூம். அது ஒரு சிட் அவுட். அங்கே தான் இ.பி. மீட்டர், ஷூ ராக் இருந்தது. கிரிலும் ஜன்னலும் நல்ல காற்றையும் வெளிச்சத்தையம் தந்து கொண்டிருந்தது. கிரிலைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.
இதனைத் தாண்டியதும் மரக் கதவு. அதற்குப் பின்னால், ஒரு விஸ்தாரமான ஹால். ஹாலின் நடுவில் சோபா செட்டும் டீபாயும் இருந்தன. சுத்தம் என்ன என்பதை அறிந்து கொஞ்ச காலம் ஆகியது என்று அவை கூறிக் கொண்டிருந்தன. அதற்கு நேர் இடது புறம் ஒரு ரூம். சுரேஷ் ‘டமால்’ என்று கதவை அறைந்து கொண்டு போன ரூம். கதவைப் பார்த்த அவளுக்கு ‘DANGER 440V KEEPOUT’ என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. புன்னகைத்தாள்.
அந்த ரூமிற்கு நேர் வலது புறம் தான் இவளது ரூமிற்கு போகக் கூடிய மாடிப்படிகள் இருந்தன. தனது ரூமை ஏற்கனவே கண்டிருந்ததால் சுரேஷின் ரூம் எப்படி இருக்கும் என்று அவளால் யூகிக்க முடிந்தது. மாடிப்படியின் அடியில் தான் டீவீ இருந்தது. அதுவும் தூசைப் போர்த்திக் கொண்டிருந்தது. டீபாயின் மேல் ரிமோட் கிடந்தது.
ஹாலைத் தாண்டிக் கொண்டு போனால் சமயலறை. மிகவும் காம்பாக்ட் ஆக இருந்தது. நுழைந்ததும் பிரிட்ஜ் இருந்தது. மற்ற பொருட்களுக்கு நான் சளைத்தவள் அல்ல என்றவாறு தூசு மண்டியிருந்தது. அதனை ஒட்டி பாத்திர செல்ப், அதனை ஒட்டி மேடை மற்றம் சிங்க். மேடையில் எண்ணை ஏறிய ஸ்டவ் ஒன்று ‘சும்மா தான் இருக்கேன்’ என்று உட்கார்ந்துக் கொண்டிருந்தது.
சமயலறையைத் தாண்டி தோட்டம். துளசி மாடம் ஒன்று துளசிச் செடி இல்லாமல் இருந்தது. கிணறு, மோட்டார், துணி துவைக்கும் கல் என சகல இத்தியாதிகளும் இருந்தன. தோட்டத்திலிருந்துப் பார்த்தால் வெளி கேட் தெரிந்தது.
திடீரென்று அவளுக்கு சில சந்தேகங்கள். பிரிட்ஜை திறந்து பார்த்தாள். மேகி ஹோல்-சேல் கடைக்குள் நுழைந்தது போலிருந்தது. மேகியின் அனைத்து வெரைட்டிகளும் உள்ளே இருந்தது. கதவை மூடிவிட்டு சுரேஷின் ரூமை நோக்கினாள். பெருமூச்சு விட்டாள். தானும் தற்போது தனியாக இருக்கிறோம், தானும் மேகி மேனியாக் ஆகிவிடுவோமோ என்று எண்ணினாள்.
அடுத்த சந்தேகத்தைத் தீர்க மீண்டும் ஹாலுக்கு வந்தாள். சற்றிப் பார்த்தாள். ஒரு ஷோகேஸ் தான் இருந்தது. ஆனால் காலியாக இருந்தது. அப்போ பூஜை அறை எங்கே? தேடினாள். சமயலறையை ஒட்டிய ஹாலின் சுவரில் ஒரு பிள்ளையார் படம் இருந்தது. ஓகோ இது தான் சாமி ரூம் போல என்று பிள்ளையாரின் முன் சென்று கை கூப்பினாள்.
எல்லாம் சரி, மிக முக்கியமான பாத்ரூம் எங்கே? தேடிக்கொண்டு அவசர அவசரமாகத் தோட்டத்தை அடைந்தாள். அங்கே வெறும் வாஷ்பேசின் தான் இருந்தது. ஆஹா எங்கே போயிற்று என்று தேடிக்கொண்டே தன் ரூமிற்கு ஓடினாள். அப்போது தான் பார்த்தாள். ரூமின் வலது மூலையில் ஒரு கதவு துணி உலர்த்தும் பல ராடுகளைக் கொண்ட துணி மாட்டிக்குப் பின்னால் இருந்தது. அதை நகர்த்திவிட்டு திறந்து பார்த்தாள். ‘அப்பாடா’ என்று நிம்மதியானாள். இடது மூலையின் கதவு சிறிய வராந்தாவை காட்டியது. ரூமை விட்டு வெளியே வந்ததும் படிகள் மேலும் நீண்டு மோட்டை மாடிக்கு அவளை அழைத்துச் சென்றது. மாடிக்குச் சென்று சற்றிலும் பார்த்துவிட்டு முன் கேட்டை பார்த்துக் கொண்டு சுவரில் உட்கார்ந்தாள்.
அப்போது மாமி ஸ்கூடியில் வந்திறங்கியதை கண்டு கீழே ஓடினாள். ‘நல்ல வேள மாமி, நீங்க பெல் அடிக்கறத்துக்குள்ள வந்தட்டேன். இல்லேனா ரெண்டு பேரும் செமத்தியா வாங்கி கட்டிட்டிருப்போம்’ என்று சிரித்துக் கொண்டே கதவைத் திறந்தாள்.
அவளை வெறுமையாகப் பார்த்விட்டு, ‘எப்பட இருந்தவன் இப்படி ஆகிட்டாங்கறத்துக்கு அவன் ஒரு நல்ல எக்ஸாம்பிள். நல்ல பையன்மா அவன். கூட யாரும் வேண்டாம்னு இருக்கன். அவ்வளோ தான். சரி அவன விடு. வீட காட்டறேன்னு ஓடிட்டேன். அதோட உன் ஒருத்தியால சுத்தம் பண்ண முடியாது. அதான் வந்தேன். வா போய் வேலய பாக்கலாம்’ என்றபடி இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
You have to tell anyone, it is ur first story. No one will believe it. I was thinking, can i write a story? If i do so, u wud be my inspiration
ReplyDeleteIt is a diff story, to hav e a real juice, read the part II first & then the part I. I have read similar stories, bt fr a fresher it is a really a gud work. The accents u hav used is more common nowadays, which has not made the reader to get bored.
Please name the girl charector. (If my memory is gud, she doesnt hav any name)
You can portrait Suresh, a lot, as the story is around him. You can say, the condition of the house described, describes him. could do more. And last, I dont like his name.
for a change (expecting change now itself) y cant u write a novel based on a true history with your much more creativity.
Thanks for the comment. Ofcourse, there will be more of Suresh in the upcoming chapters, this is just the beginning. And about the name, i chose that name cause it sounded simple. next story definitely a different name :) About the girl' name, you get to hear it only in the last chapter, well there will be a hint in the future chapter. Make a guess then. Thanks again :)
ReplyDeleteLallu really dont know what to say!!!
ReplyDeleteI still remember that day when the chief guest for our annual day in Prince told "oru pannai sothuku oru soru padham", reading ur story in our school magazine, now I really understand its full meaning. I cant believe my sis writing such gud script which gives u a story next door feeling, in her first novel attempt itself. U made me, "who never reads a story book" completely to move on and on for next chapters, u have got 1 more fan. Really proud of u!!!
Jaan
thank you jaan :)
ReplyDelete