Monday, March 16, 2009

ஒரு கதாசிரியரின் கதை - 1

1.புது வரவு

டக்... டக் டக்.... டக் டக் டக்.... கம்பியூட்டரின் கீபோர்டை வேகமாகத் தட்டிக் கொண்டிருந்தான் சுரேஷ். இன்னும் இரண்டு நாட்களில் அவனது நாவலின் ஸ்கிரிப்டை எடிட்டரிடம் கொடுத்தாக வேண்டும். இன்னும் 50 பக்கங்கள் டைப் செய்ய வேண்டியிருந்தது.

சுரேஷ் கடந்த 5 ஆண்டுகளின் அயரா உழைப்பால் நாவல் உலக்த்தில் தனக்கென ஓர் இடத்தை ஸ்தாபித்திருந்தான். அவனது வயது, இரண்டு மாதங்களில் வரவிருக்கும் அக்டோபரில் 28 முடியும்.

க்ரைம், காதல், சமுதாயக் கதை – எல்லாப் பிரிவுகளிலும் அவன் எழுத்துக்கள் பிரபலம். அரை பக்கக் கதையிலிருந்து ஐந்நூறு பக்க நாவல் வரை எழுதியுள்ளான். தற்போது ‘அபிமானி’ என்ற குறுநாவலை எழுதி வருகிறான். அவனது விரல்கள் கீபோர்டின் மேல் நடனமாடிக் கொண்டிருந்தது.

டிங் டாங் ....

வாசலில் அழைப்பு மணி அந்த நாட்டியத்தை தடுத்தது. கண்ணை மூடிக்கொண்டு அரை நிமிடம் தாமதித்து மீண்டும் ஆரம்பித்தான்.

டிங் டாங் .... டிங் டாங் .... இம்முறை வேகமாக மணி அழைத்தது.

‘சே, எப்போ பாரு இது வேணுமா, அது வேணுமானு யாராவது வந்துகிட்டே இருக்காங்க’ என்று அலுத்துக்கொண்டே கதவை திறந்தான்.

‘ஓ மாமி நீங்களா, வாங்க. நான் யாரோ சேல்ஸ் ரெப்னு நெனச்சு கதவ தெறக்கல’ என்ற படி சோபாவில் தூசு தட்டினான்.

‘உக்காருங்க மாமி. 5 ஆந் தேதியா இன்னிக்கு. வாடக எடுத்துட்டு வரேன். ஒரு நிமிஷம்’ என்று உள்ளே போனான்.

‘இன்னிக்கு ஒண்ணாந் தேதி தான்டா’ என்று அவனுக்கு சொல்லிவிட்டு, ‘நீ உள்ள வாம்மா’ என்று வாசலை நோக்கிக் குரல் கொடுத்தாள்.

சுரேஷ் உள்ளிருந்து எட்டிப்பார்த்தான். வாசலில் ஒரு பெட்டியும் ஹண்டுபாக் உடணும் ஒரு பெண் உள்ளே வந்தாள். வெள்ளை குர்த்தாவும் நீல ஜீன்ஸும் அணிந்திருந்தாள். கூந்தலை சும்மா சுருட்டி ஒரு பெரிய கிளிப் ஒன்று போட்டிருந்தாள். அவளுக்கு சுமார் 25 வயதிருக்கும் என்று எண்ணினான்.

‘மாடில தான்மா உன் ரூம். வீடு புல்லி பர்னிஷ்டு தான். கிட்சன்ல பாத்திரங்கலிருந்து பிரிட்ஜு எல்லாமே இருக்கு. நீ தாராளமா யுஸ் பண்ணிக்கலாம். போய் பெட்டிய மாடில வச்சுட்டு வா, வீட்ட சுத்தி காட்டறேன்.’ என்ற மாமியின் முன்னால் சுரேஷ், முகத்தில் ஒரு பெரிய கேள்விக்குறியோடு போய் நின்றான்.

‘மாமி, ஒரு நிமஷம். என்ன சொல்லவரிங்க. எனக்கு புரியல. இவங்க யாரு?’ கேட்டான் சுரேஷ்.


‘இவ இந்நிலேந்து இங்க வாடகைக்கு இருக்கப் போறா. பேரு ..’ என்று சொல்ல வந்தவளை தடுத்தான் சுரேஷ்.



‘அப்போ நான் எங்க போக? என்ன மாமி இப்படி பண்ணறீங்க? ஒரு வார்த்த கூட என்கிட்ட சொல்லல. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.’ மிக கோவமாகக் கத்தினான் சுரேஷ்.


மாமி அவனை ஓர் பார்வை பார்து விட்டு தரையைப் பார்த்து பெரு மூச்சு விட்டாள். ‘நிறுத்துடா. கத்தாத. உன்ன வெளிய போக சொன்னேனா? இவளும் உன்ன மாதிரி இந்த வீட்டுல வாடகைக்கு இருக்கப் போறா. உன்னோட வாடக செலவ கொறச்சிருக்கேன்டா, சந்தோஷப்படு.’ என்றாள்.


‘மாமி, வாடகை ஜாஸ்தி வேணும்னா சொல்லுங்க, நான் தரேன். ஆனா, இன்னொருதங்க இங்க வேண்டாம். அதுவும் ஒரு பொண்ணு கண்டிப்பா வேண்டாம். அவங்க பெமலி கூட இருப்பாங்களா?’ கேட்டான்.


‘இல்ல’ மாமி பதிலளித்தாள்.


‘அப்போ கண்டிப்பா நான் ஒத்துக்க மாட்டேன். எப்படி மாமி ஒரு பொண்ண இங்க தனியா விடுவீங்க?’ எரிந்து விழுந்தான்.

‘அவ என்னோட ப்ரெண்டோட பொண்ணுடா. வீட்டுல ஒரு பிரச்சன. கொஞ்ச நாள் தனியா இருக்கலாம்னு வந்திருக்கா. தெரிஞ்சவங்க வீடுனா சவுகரியமா இருக்கும்னு நான் தான் இங்க வர சொன்னேன். இரண்டு மூணு மாசத்துக்கு தான்.’ மாமி விளக்கினாள்.


‘மாமி என்னோட பிரைவசிய என்னால விட்டுக்கொடுக்க முடியாது. யாரும் பக்கத்துல வேண்டாம்னு தானே ஒரு அசிஸ்டெண்டு கூட நான் வெச்சிக்கலை. நான் யாரையும் இந்த வீட்டுல அலோ பண்ண மாட்டேன்.’ விவாதித்தான் சுரேஷ்.


‘முணு காரணம் சொல்ல முடியும், அவ இங்க இருக்க.
1. உன் பிரைவசி ஒண்ணும் கெடாதுடா. நீ அந்த ரூம்குள்ள போய்டினா, வெளய இடியே விழுந்தாலும் உனக்கு தெரியப் போறதில்ல. அவ மாடில தான் இருக்கப் போறா. உனக்கும் கிட்சனுக்கும் சம்பந்தமே கெடயாது.
2. செகென்டா, வீட்ட எப்படி வைச்சிட்டிருக்க பாரு. வேலகாரி கூட நீ அந்த ரூம்லேந்து வெளிய வரமாட்டேனு நல்ல டிமிக்கி கொடுத்துட்டு சம்பளம் மட்டும் வாங்கிட்டு போறா. என்னால மாசா மாசம் மயிலாப்பூர்லேந்து மடிபாக்கத்துக்கு வந்துட்டு போக முடியாது. அவ இங்க இருந்தா வீடு வீடா இருக்கும்.
3. மூணாவதா, போன வாரம் பொண்ணு பாக்கறதா இருந்ததுல, சீக்கரம் கல்யாணம் முடிஞ்சிடும்னு நெனச்சேன். ஆனா நீ பொண்ணு பாக்கக்கூட போகல.’
- மாமி சொல்லி முடித்தாள்.


‘மாமி, பொண்ண போய் பாக்காதது என் தப்பு தான். என்னோட இருவது வயசுல அம்மா போனதுலேந்து தனியா இருக்கேன். தனியாவே பழகிட்டேன். கூட யாராவது இருந்தா அன்கம்பர்டபுளா இருக்கு. நீங்க சொன்னப்போ என்ன மாத்திக்கலாம்னு நெனச்சேன். ஆனா கடசீல முடியல. அதனால அவங்களுக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டுகிட்டேன். இப்போ திடீர்னு யாரயோ கூட்டிட்டு வந்து இங்க தங்க வெச்சா எனக்கு சபகேட்டிங்கா இருக்கும். ப்ளீஸ் மாமி, வேண்டாமே. ரொம்ப ப்ளீஸ்’ கெஞ்சினான் சுரேஷ்.


‘இந்த ரீசன நெறயவே கேட்டுட்டேன். அவ இங்க தான் இருக்கப் போறா. நீ உன் ரூமுக்குப் போய் பூட்டிக்கோ. அவ்வளோ தான். இது தான் பைனல். அவள இங்கிருந்து என்னால அனுப்ப முடியாது.’ என்றாள் மாமி தீர்மானமாக.





இவர்களது விவாதத்தை கேட்டபடி படியில் நின்றிருந்தாள் அந்த பெண். மாமியின் அருகில் வந்தாள். ‘நீ இங்க இருக்கலாம்மா. இவன் சுரேஷ். பெரிய எழுத்தாளன். பேசினது கேட்டல. ரெண்டு பேரும் ஒரு பிராப்ளம் இல்லாம கம்பர்டபுளா இருந்துகோங்க. நீ எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணு ஓகேவா.’ என்று அவனை அவளிடம் அறிமுகப்படுத்தினாள்.


‘ஹலோ என் பேரு ....’ சொல்லவந்தவளை கோவமாக முறைத்து விட்டு ‘எதுவா இருந்தாலும் எனக்கு தேவயில்லாத விஷயம். எக்காரணத்தக்கொண்டும் என் ரூம் கிட்ட வராதீங்க’ பொரிந்துவிட்டு தன் அறையில் அடைந்துக் கொண்டான்.


மாமி அவளை பாவமாகப் பார்த்தாள். ‘கவல படாதீங்க மாமி. ஓரளவுக்கு இத எதிர்பார்த்து தான் வந்தேன். நீங்க அப்பா அம்மாவ பாத்துக்கோங்க. நான் டெய்லி கால் பண்ணறேன்னு சொல்லுங்க.’ என்றாள் அந்தப் பெண்.


அவள் முடிப்பதற்கு முன் மாமி அவனது கதவை தட்டி, ‘டேய் இவ உன்னோட நல்ல ரசிகைடா. இப்படி ஒரு பர்ஸ்ட் இம்பிரஷன் தந்திருக்கியே. அவளுக்கு ஏதாவது பிராப்ளம்னு கேள்விப்பட்டேன், நீ அவ்வளோ தான். தெரிஞ்சிக்கோ.’ என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணிடம் விடைப்பெற்றுக் கொண்டு தனது ஸ்கூடியில் பறந்தாள் ராதா மாமி.

6 comments:

  1. Till now interesting, willing to read part II continuously

    Jaan

    ReplyDelete
  2. it is really good for the first attempt.keep it up. shall continue to read and send u comments.

    ReplyDelete
  3. it is really good for the first attempt.keep it up. shall continue to read and send u comments.

    ReplyDelete
  4. thank you everyone. I will try to maintain the tempo of the story. ^_^

    ReplyDelete